செய்திகள் :

அடையாளத்தின் அடிப்படையில் 6 பயணிகள் சுட்டுக்கொலை! பிரதமர் கண்டனம்!

post image

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மர்ம கும்பலின் துப்பாக்கிச் சூட்டில் 6 பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

பலூசிஸ்தானின் குவடார் மாவட்டத்தின் கலாமத் பகுதியில் நேற்று (மார்ச் 26) நள்ளிரவு கராச்சியிலிருந்து வந்த பேருந்தை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம கும்பல், பயணிகளின் அடையாள அட்டைகளை வாங்கி சோதனை செய்துள்ளனர்.

அப்போது, அதில் பஞ்சாப் மாகாணத்திலிருந்து வந்த 5 பேரை பேருந்திலிருந்து கீழே இறக்கி அவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், அவர்கள் 5 பேரும் சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும், இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மற்றொரு பயணியும் தற்போது உயிரிழந்துள்ள நிலையில் பலியானோரது எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து உள்ளூர் ஊடங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், பயணிகளின் அடையாள அட்டையை சோதனை செய்து அவர்களை சுட்டுக்கொன்ற நபர்கள் மேலும் 3 பேரை கடத்தி சென்றதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தற்போது வரை இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், கடந்த காலங்களில் பஞ்சாப் மாகாண மக்களைக் குறிவைத்து பலூச் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தின் மூலமாக கண்டனம் தெரிவித்துள்ள பலூசிஸ்தான் முதல்வர் ஷர்ஃபராஸ் புக்தி, அப்பாவி பயணிகளை தங்களது அடையாளத்தின் அடிப்படையில் கொலை செய்திருப்பது கொடூரமான மற்றும் கோழைத்தனமான செயல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த மார்ச் 11 அன்று பலூசிஸ்தானில் ஜாஃபர் விரைவு ரயிலை சிறைப்பிடித்து பலூச் லிபரேஷன் ஆர்மியின் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பயணிகள் கொல்லப்பட்டனர்.

பின்னர், மறுநாள் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் 33 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு 300-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பலூசிஸ்தானில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகின்றது.

இதையும் படிக்க:தென் கொரிய காட்டுத் தீ: அதிகரிக்கும் உயிர்ப் பலிகள்...போராடும் வீரர்கள்!

7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி,கன்னியாகுமரி,போளூர், செங்கம், சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி, பெருந்துறை ஆகிய 7 ... மேலும் பார்க்க

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி ஓட்டு கேட்க முடியாது! - துரைமுருகன்

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி யாரும் இங்கு வாக்கு சேகரிக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய ரூ. 4,034 கோடியை ... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

மியான்மர், தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குள்ள தமிழர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி தேவைப்படுவோர் - 1800 309 3793+91 80690 099... மேலும் பார்க்க

சமூக நீதியை நிலைநாட்டும் அரசு! - ஆதி திராவிடர், பழங்குடியினர் நலக் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனை மேம்படுத்தும் பொருட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல... மேலும் பார்க்க

தென் கொரிய காட்டுத் தீ: நெருப்பில் சடங்கு செய்த நபர் காரணமா?

தென் கொரியாவில் காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தென் கொரியாவின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத... மேலும் பார்க்க

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்!

லெபனான் நாட்டு தலைநகரின் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் கடைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் த... மேலும் பார்க்க