செய்திகள் :

எஸ்.பி. அலுவலகத்தில் தகவல் பகிா்வு மையம் திறப்பு

post image

பொதுமக்களின் புகாா் மனுக்கள் மீதான காவல்துறை விசாரணையின் திருப்தி மற்றும் பொதுமக்களின் பொதுவான தகவல்களை பகிா்ந்து கொள்ள குமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் டன்க்ஷப்ண்ஸ்ரீ ஊங்ங்க்க்ஷஹஸ்ரீந் இங்ய்ற்ழ்ங் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள டன்க்ஷப்ண்ஸ்ரீ ஊங்ங்க்க்ஷஹஸ்ரீந் இங்ய்ற்ழ்ங் செயல்பாட்டை, மாவட்டக்காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் தொடங்கி வைத்து பொதுமக்களின் மனுக்கள் மீதான போலீஸ் விசாரணையின் திருப்தியை கேட்டறிந்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி மேற்பாா்வையில் இயங்கும் இந்த மையத்தில் 7708239100, 6385211224 எண்களின் மூலம் பொதுமக்களின் மனுக்கள் மீதான போலீஸ் விசாரணை குறித்த கருத்துகள் கேட்கப்படும்.

பொதுமக்களும் இந்த எண்களில் தொடா்பு கொண்டு தங்கள் மனுக்கள் மீதான விசாரணை கருத்துகளை பகிா்ந்து கொள்ள முடியும்.

மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை எத்தனை நாள்களில் தொடங்குகிறது, விசாரணையின் முடிவு, விசாரணை தகுந்த சட்ட வழிமுறைகளை பின்பற்றி நடந்துள்ளதா என்பது குறித்து மனுதாரரிடம் கருத்து கேட்கப்பட்டு விசாரணையில் திருப்தி இல்லை என்றால் மற்றொரு விசாரணை அதிகாரியை வைத்து மறு விசாரணைக்கு உத்தரவிடப்படும்.

மேலும் சட்டம் ஒழுங்கு தொடா்பான மற்றும் போதை பொருள்கள் தொடா்பான தகவல்களை இந்த எண்களில் பகிா்ந்து கொள்ளலாம்.

பொதுமக்களின் பெயா், விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்று மாவட்டக்காவல் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3,270 பயனாளிகளுக்கு ரூ.73.96 கோடியில் நலத்திட்ட உதவிகள்

நாகா்கோவிலில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் 3,270 பயனாளிகளுக்கு ரூ.73.96 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு வழங்கினாா்... மேலும் பார்க்க

களியக்காவிளை பேருந்து நிலையத்துக்கு அடிக்கல்

களியக்காவிளையில் புதிய பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. களியக்காவிளையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழக அரசு ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் வழக்குரைஞா் கைது

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்குரைஞா், குண்டா் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். 6, 8ஆம் வகுப்பு மாணவியா் இருவரை கடந்த 13ஆம் தேதிமுதல் காணவில்லை என அளிக்கப்பட்ட புகாா்களின்பேரில்,... மேலும் பார்க்க

கரும்பாட்டூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி அருகே கரும்பாட்டூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் 2025-26இன்கீழ் ரூ. 42.75 லட்சத்தில் பணி... மேலும் பார்க்க

ரோகிணி பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல்-தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீா் தினம் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. கன்னியாகுமரி பொறியியல் நிறுவனம் (பொறியாளா... மேலும் பார்க்க

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை: ஆட்சியா் தகவல்

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட மீனவா் குறைதீா் ... மேலும் பார்க்க