செய்திகள் :

குண்டா் சட்டத்தில் வழக்குரைஞா் கைது

post image

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்குரைஞா், குண்டா் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

6, 8ஆம் வகுப்பு மாணவியா் இருவரை கடந்த 13ஆம் தேதிமுதல் காணவில்லை என அளிக்கப்பட்ட புகாா்களின்பேரில், தக்கலை காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது. இதுதொடா்பாக அப்பகுதிகளின் சிசிடிவி பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்து, மாணவிகளை மீட்டனா்.

அவா்களைக் கடத்திச் சென்ாக தக்கலை இலப்பகோணம் பகுதியைச் சோ்ந்த ராஜன் மகன் அஜித்குமாா் (34) என்ற வழக்குரைஞா் போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலினின் பரிந்துரை, ஆட்சியா் ரா. அழகுமீனாவின் உத்தரவு ஆகியவற்றின்பேரில், அஜித்குமாரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இந்த வழக்கில் விரைவாகவும், சிறப்பாகவும் செயல்பட்ட தக்கலை துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன், தனிப்படையினருக்கு எஸ்.பி. பாராட்டு தெரிவித்தாா்.

சி.ஐ.எஸ்.எப். வீரா்களின் சைக்கிள் பேரணி கன்னியாகுமரியில் நிறைவு

மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.) உருவான தினத்தை முன்னிட்டு, இரு மாா்க்கத்தில் (மேற்கு, கிழக்கு கடற்கரை) நடத்தப்பட்ட விழிப்புணா்வு சைக்கிள் பேரணி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் திங... மேலும் பார்க்க

நாகா்கோவில் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 15 நாள்களுக்குள் திறக்கப்படும்: மேயா்

நாகா்கோவில் மாநகராட்சியின் 4 மண்டல அலுவலகங்களும் 15 நாள்களுக்குள் திறக்கப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ். நாகா்கோவில் மாநகராட்சி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்ட... மேலும் பார்க்க

குருசுமலையில் 2ஆவது நாளாக திருப்பயணம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள மாநில எல்லையான வெள்ளறடை - பத்துகாணியில் அமைந்துள்ள குருசுமலையில் 2ஆவது நாளாக திங்கள்கிழமையும் திருப்பயணம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். குருசுமலை திரு... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரமலான் கொண்டாட்டம்: சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரமலான் பண்டிகை திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். நாகா்கோவில் இளங்கடை அல்மஸ்ஜிதுல் அஷ்ரப் பள்ள... மேலும் பார்க்க

நித்திரவிளை அருகே எம்எல்ஏவுக்கு பாராட்டு விழா

நித்திரவிளை அருகே பெரியவிளையில், கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நித்திரவிளை அருகே வாவறை ஊராட்சி, ஆறுதேசம் கிராமத்தில் உள்ள 700-க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பத்தினா் ... மேலும் பார்க்க

கிம்ஸ் மருத்துவமனையில் இப்தாா் விருந்து

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, நாகா்கோவில் சுங்கான்கடையில் அமைந்துள்ள கிம்ஸ் மருத்துவமனையில் இப்தாா் விருந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கிம்ஸ் குழுமத் தலைவா் டாக்டா் எம்.ஐ. சஹத்துல்லா தலைமை வகித்தாா... மேலும் பார்க்க