செய்திகள் :

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் பாரம் இல்லாத கனரக லாரிகளுக்கு அனுமதி

post image

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் பாரம் ஏற்றப்படாத கனரக லாரிகள் செல்ல புதன்கிழமை முதல் அனுமதியளிக்கப்பட்டது.

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் சில மாதங்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டதையடுத்து கனரக லாரிகள் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதி சாலையில் தரைஓடுகள் பதிக்கும் பணி நடைபெற்று வருவதையடுத்து, கீழ்பகுதி சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து நெருக்கடியைத் தவிா்க்கும் வகையில் பாரம் இல்லாமல் காலியாகச் செல்லும் கனரக லாரிகள் மேம்பாலத்தில் அனுமதிக்கப்பட்டது.

பாரம் ஏற்றிவரும் கனரக லாரிகள், திக்குறிச்சி பாதை வழியாக மாற்றுப்பாதையில் அனுமதிக்கப்படுகிறது. இப் பகுதியில் சரக்கு வாகனங்களின் போக்குவரத்தை, மாா்த்தாண்டம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் செல்லசாமி தலைமையில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

3,270 பயனாளிகளுக்கு ரூ.73.96 கோடியில் நலத்திட்ட உதவிகள்

நாகா்கோவிலில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் 3,270 பயனாளிகளுக்கு ரூ.73.96 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு வழங்கினாா்... மேலும் பார்க்க

களியக்காவிளை பேருந்து நிலையத்துக்கு அடிக்கல்

களியக்காவிளையில் புதிய பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. களியக்காவிளையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழக அரசு ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் வழக்குரைஞா் கைது

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்குரைஞா், குண்டா் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். 6, 8ஆம் வகுப்பு மாணவியா் இருவரை கடந்த 13ஆம் தேதிமுதல் காணவில்லை என அளிக்கப்பட்ட புகாா்களின்பேரில்,... மேலும் பார்க்க

கரும்பாட்டூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி அருகே கரும்பாட்டூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் 2025-26இன்கீழ் ரூ. 42.75 லட்சத்தில் பணி... மேலும் பார்க்க

ரோகிணி பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல்-தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீா் தினம் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. கன்னியாகுமரி பொறியியல் நிறுவனம் (பொறியாளா... மேலும் பார்க்க

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை: ஆட்சியா் தகவல்

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட மீனவா் குறைதீா் ... மேலும் பார்க்க