செய்திகள் :

'புதின் சீக்கிரம் இறந்துவிடுவார்!' - ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து ஜெலன்ஸ்கி பேச்சு

post image

ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போதிலிருந்து இந்தப் போரை நிறுத்துவதில் முனைப்புடன் இருக்கிறார்.

இது குறித்து அமெரிக்கா வந்திருந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் கடந்த மாதம் பேச்சுவார்த்தை நடத்தினார் ட்ரம்ப். ஆனால், அது கைக்கூடவில்லை.

ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை தோல்வி!
ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை தோல்வி!

ஆனால், அதன் பிறகு, சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிபர்களின் பேச்சுவார்த்தையில் 'உடனடி 30 நாள்கள் போர் நிறுத்தத்திற்கு' ஒப்புக்கொண்டது உக்ரைன்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிகாரிகள் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டனர்.

இதனிடையில், 'போர் நிறுத்தத்திற்கு தயார்' என்று கூறி, அது சம்பந்தமான சில கேள்விகளையும் கேட்டிருந்தார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், அந்தக் கேள்விகளுக்கான பதில் இன்னமும் அமெரிக்காவிடம் இருந்து வரவில்லை.

'அப்போது போர் நின்றுவிடும்'! - ஜெலன்ஸ்கி

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள ஜெலன்ஸ்கி, "அவருடைய வயதை வைத்து பார்க்கும்போது, புதின் சீக்கிரம் இறந்துவிடுவார். அது தான் உண்மை. அப்போது இந்தப் போர் நின்றுவிடும். அதற்கு முன்பு கூட போர் நிறுத்தத்தை எட்டலாம்" என்று பேசியுள்ளார்.

புதினின் உடல்நிலை மோசமடைந்துள்ளது போன்ற தகவல்கள் வெளியாகி வரும் வேளையில், ஜெலன்ஸ்கி இப்படி பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதற்கு புதின் மற்றும் போர் நிறுத்தத்திற்கு கடுமையாக முயலும் அமெரிக்காவின் பதிலடி எப்படி இருக்கும் என்பதை அடுத்தடுத்து நடவடிக்கைகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

'திரும்ப போய்விடுங்கள்' - வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை - காரணம் என்ன?

அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள் சட்டத்திற்கு புறம்பான செயல்கள், போராட்டங்களில் ஈடுபட்டால் அமெரிக்க மாணவர்களின் படிப்பு நிறுத்தப்படும் அல்லது கைது செய்யப்படுவார்கள். வெளிநாட்டு மாணவர்கள் அவர்கள் நாட்... மேலும் பார்க்க

"எதையும் மாற்றிப் பேசவில்லை; எந்தக் கட்சியையும் அழித்து வளர மாட்டோம்" - அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கூட்டணி குறித்து நான் பேச முடியாது. உள்துறைஅமைச்சரின்கருத்தையே இறுதியாக எடுத்துக் கொள்ளுங்கள்.... மேலும் பார்க்க

"திமுக கூட்டணி, சூட்கேஸ் கூட்டணி; கொள்கைக் கூட்டணி கிடையாது" - சொல்கிறார் செல்லூர் ராஜூ

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலம் புதூர் கிராமத்தில் நடந்த விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசும்போது, "100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்திக் ... மேலும் பார்க்க

`உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன; திமுக நிர்வாகிகள் கவனமாக பேசவேண்டும்'- ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

ராமேஸ்வரம் நகர் திமுக சார்பில் பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நகர் மன்ற தலைவர் நாசர் கான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறைப்புரையாற்றிய திமுக-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ''யார் கட... மேலும் பார்க்க

'இது கட்டமைக்கப்பட்ட சுரண்டல்!' ஏ.டி.எம்மில் பணம் எடுத்தால் ரூ.23 வரை கட்டணம்- RBI; ஸ்டாலின் கண்டனம்

வரும் மே மாதம் முதல், ஒரு மாதத்தில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஏ.டி.எம்களில் எடுக்கப்படும் பணத்திற்கு ரூ.2-ல் இருந்து ரூ.23 வரை வங்கிகள் கட்டணம் விதிக்கலாம் என்று கடந்த வெள்ளிக்கிழமை இந்திய ரிசர்வ் வங்... மேலும் பார்க்க

``ஒரு வார்டு எலெக்‌ஷனில்கூட நிற்கவில்லை; அதற்குள் அடுத்த முதல்வராம்’’ - திருமா காட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் பேருந்து நிலையம் அருகிலுள்ள தென்பள்ளிப்பட்டில், வி.சி.க தேர்தல் அங்கீகார வெற்றி விழா நேற்று இரவு நடைபெற்றது. வி.சி.க மகளிர் விடுதலை இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்... மேலும் பார்க்க