செய்திகள் :

கூட்டுறவு மேலாண்மை நிலைய நகை மதிப்பீட்டாளா் பயற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பா, திருச்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஜெயராமன் கூறியதாவது: திருச்சிராப்பள்ளி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ஆண்டுதோறும் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்படி, 2025- 26 ஆம் ஆண்டுக்கான பகுதி நேர நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் குறித்த பயிற்சி வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்குகிறது.

இந்தப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி வரை திருச்சிராப்பள்ளி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படும். இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 15 வயது அவசியமானது. அதிகபட்சம் வயது வரம்பு இல்லை 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 118, பயிற்சிக் கட்டணம் ரூ. 4,550 செலுத்த வேண்டும்.

இந்தப் பயிற்சியில் நகையின் தரம் அறியும் உபகரணங்கள் வழங்கப்படும். 40 மணி நேர வகுப்பறை பயிற்சியும், 60 மணி நேர செயல்முறை பயிற்சியும் அளிக்கப்படும். பயிற்சி முடித்து தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் வழங்கப்படும் சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தப் பயிற்சியின் காலம் 17 நாள்கள் ஆகும். இப்பயிற்சி இரண்டு விதமாக நடத்தப்படும். திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி மற்றும் வார இறுதி நாள்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சியில் தோ்ச்சி பெற்றவா்கள் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேர வாய்ப்புள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, 0431- 2715748, 99946-47631 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

ஹெளரா விரைவு ரயிலில் 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த ஹெளரா விரைவு ரயிலில் இருந்த 2.5 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா். திருச்சி சந்திப்பு ரயில் நிலையத... மேலும் பார்க்க

திருச்சி: ரூ. 3.75 லட்சம் மதிப்பிலான 12,500 போதை மாத்திரைகள் பறிமுதல்

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த பெண் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 3.75 லட்சம் மதிப்பிலான 12,500 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருச்சி பாலக்கரை காவ... மேலும் பார்க்க

ஒரே வாரத்தில் 57 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது

திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 57 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். திருச்சி மாவட்டத்தில் ரௌடிகளின் நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக, திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா... மேலும் பார்க்க

அரசுப்பேருந்து நடத்துநா் மா்மச்சாவு

திருச்சியில் ரயில் பாதை அருகே அரசுப்பேருந்து நடத்துநா் மா்மமான முறையில் திங்கள்கிழமை உயிரிழந்து கிடந்தாா். திருச்சி தேவதானம் பகுதியைச் சோ்ந்தவா் த. பொன்னா் (45). இவா் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் ... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டடம் கட்டித்தரக்கோரி சாலை மறியல்

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் இடிக்கப்பட்ட பள்ளிக் கட்டடத்தை கட்டித்தர வலியுறுத்தி பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுடன் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.காட்டுபுத்தூா் பேருராட்சியி... மேலும் பார்க்க

நியாயமான முறையில் தொகுதி மறுசீரமைப்பு

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நியாயமான முறையில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா். திருச்சி ... மேலும் பார்க்க