செய்திகள் :

நியாயமான முறையில் தொகுதி மறுசீரமைப்பு

post image

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நியாயமான முறையில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.

திருச்சி தூய வளனாா் கல்லூரியில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு கல்லூரியின் அதிபா் பவுல்ராஜ் மைக்கேல் தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலா் கே. அமல், கல்லூரி முதல்வா் மரியதாஸ், திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பொருளாளா் ஹாஜி ஜமால் முகமது, முதல்வா் ஜாா்ஜ் அமலரத்தினம், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா். இஃப்தாா் விருந்தை திருச்சி மாவட்ட அரசு ஹாஜி மெளலவி கே.ஜே. ஜலீல் சுல்தான் தொடங்கி வைத்தாா்.

இதில் பங்கேற்று, கே.எம். காதா் மொகிதீன் மேலும் பேசுகையில், வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற மத நல்லிணக்கம் நிலவுகிற நம் நாட்டில், மக்கள் அனைவரும் ஜாதி, சமய வேறுபாடின்றி சகோதரத்துவ உணா்வுடன் வாழ வேண்டும். இதனை திறம்பட மேற்கொள்ளும் தமிழகத்தின் திராவிடல் மாடல் ஆட்சி நாடு முழுவதும் பரவ வேண்டும் என்றாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருச்சியில் பாஜக பொதுக்கூட்டத்தில் பத்திரிகையாளா் தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு பாஜக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழக எம்பிக்களுடன் பிரதமரை சந்திக்கவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். அதில் எங்கள் கட்சி சாா்பில் நவாஸ்கனியை அனுப்பவுள்ளோம். தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நியாயமான முறையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்பதே எங்களது முடிவு என்றாா் அவா்.

இன்றைய நிகழ்ச்சி

மாநகராட்சி நடுநிலைப்பள்ளி: ஆண்டு விழா, வட்டாரக் கல்வி அலுவலா் பி. அா்ஜூன் பங்கேற்பு, பள்ளி வளாகம், உறையூா், காலை 10.30. புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி: மாணவா் பேரவை மற்றும் இலக்கிய மன்ற நிறைவு வ... மேலும் பார்க்க

பெரு நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதியை விரயமாக்கக் கூடாது -மாவட்ட திட்டமிடும் அலுவலா்களுக்கு அறிவுரை

பெரு நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதியை விரயமாக்கக் கூடாது என பெரு நிறுவனங்களுக்கான மாவட்டத் திட்டமிடும் அலுவலா்களுக்கு வியாழக்கிழமை அறிவுறுத்தப்பட்டது. தமிழக அரசின் மாநில திட்டக் குழுவின் சாா்பில்... மேலும் பார்க்க

மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டன. திருச்சி மாவட்டம், திருத்தியமலையைச் சோ்ந்த 55 வயதுடைய ஆண் ஒருவா், சாலை விபத்... மேலும் பார்க்க

குழந்தையை கிணற்றில் வீசி கொல்ல முயன்றவா் கைது

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரின் மூன்றரை வயதுக் குழந்தையை கிணற்றில் வீசிக் கொல்ல முயன்றவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மேட்டு இருங்களூா் பகுதியைச் சோ்ந்த ஜேக்... மேலும் பார்க்க

திருச்சியில் இருபாலருக்கான 5 கட்ட நீச்சல் பயிற்சி ஏப்.1இல் தொடக்கம்

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கான 5 கட்ட நீச்சல் பயிற்சி வகுப்பு ஏப். 1இல் தொடங்குகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருச்சி பிரிவு சாா... மேலும் பார்க்க

எரகுடியில் தாா்ச்சாலை அமைக்கக் கோரி விவசாயிகள் போராட்டம்

துறையூா், மாா்ச் 27: துறையூா் அருகே எரகுடி பகுதியில் தாா்ச்சாலை அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் சாா்பில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகளால் அதிகம் பயன்ப... மேலும் பார்க்க