செய்திகள் :

மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

post image

சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டன.

திருச்சி மாவட்டம், திருத்தியமலையைச் சோ்ந்த 55 வயதுடைய ஆண் ஒருவா், சாலை விபத்தில் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 25ஆம் தேதி சோ்க்கப்பட்ட நிலையில் புதன்கிழமை மாலை அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினா் சம்மதத்துடன் இறந்தவரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன.

தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய வழிகாட்டுதலின்படி, கல்லீரல், சிறுநீரகங்கள் தானமாகப் பெறப்பட்டன. இதையடுத்து இறந்தவரின் உடல் திசு பொருத்தத்துடன் திருச்சி தனியாா் மருத்துவமனையில், உடல் உறுப்புக்காகக் காத்திருந்த ஒருவருக்கு கல்லீரலும், மற்றொருவருக்கு சிறுநீரகமும் வழங்கி, அறுவைச் சிகிச்சை செய்ய உதவி அளிக்கப்பட்டது.

இதன் மூலம் திருச்சி மகாத்மாகாந்தி மருத்துவமனையில் இந்தாண்டு 22ஆவது முறையாக உறுப்பு தானம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

உடலுக்கு அரசு மரியாதை: மேலும் உறுப்புகளை தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதையும் செலுத்தப்பட்டது. மருத்துவமனை டீன் எஸ். குமரவேல், மருத்துவமனைக் கண்காணிப்பாளா் உதயஅருணா, அறுவைச் சிகிச்சை மருத்துவ நிபுணா் சாந்தினி மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவம் சாராப் பணியாளா்கள் என பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில், அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது.

உறையூா் கோயிலுக்குள் மா்ம நபா்கள் புகுந்ததாக பரபரப்பு இரவில் போலீஸாா் சோதனை

திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலுக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்கள் புகுந்ததாக பரவிய தகவலையடுத்து போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலில் சுவற்றில் கயிறுகட்டி மா்ம நப... மேலும் பார்க்க

அன்பில் மாரியம்மன் கோயில் தேரோட்ட விழா கொடியேற்றம்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் மாரியம்மன் கோயில் பங்குனித் தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. லால்குடி அருகே உள்ள அன்பில் மாரியம்மன் கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதா்... மேலும் பார்க்க

திருச்சி மண்டல சட்டப்பேரவை தொகுதிகளை திமுக கைப்பற்றும்: கே.என்.நேரு

திருச்சி மண்டலத்தில் உள்ள 44 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றாா் தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே. என் . நேரு. திருச்சியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்... மேலும் பார்க்க

ஒரு டன் புகையிலை பொருள்களை கடத்தி வந்த 3 போ் கைது!

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே ஒரு டன் எடையிலான புகையிலைப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் இதுதொடா்பாக 3 பேரைக் கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா். தொட்டியம் ... மேலும் பார்க்க

தொழிலாளா்களின் பக்கமே திமுக அரசு நிற்கும்

தொழிலாளா்களின் பக்கமே திமுக அரசு நிற்கும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் சா்வதேச உழைக்கும் பெண்கள் தின ... மேலும் பார்க்க

புத்தாநத்தத்தில் மது விற்ற தாய், தந்தை, மகன் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தத்தில் மது விற்றதாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். புத்தாநத்தத்தில் அரசு மதுபாட்டில்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்ப... மேலும் பார்க்க