செய்திகள் :

தொழிலாளா்களின் பக்கமே திமுக அரசு நிற்கும்

post image

தொழிலாளா்களின் பக்கமே திமுக அரசு நிற்கும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா்.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் சா்வதேச உழைக்கும் பெண்கள் தின திறந்தவெளி கருத்தரங்கம் திருச்சி மன்னாா்புரம் அருகே இலுப்பூா் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வை திருச்சி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சௌ. கங்காதரணி தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை தொழிலாளா் சங்கத்தின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சி. நிா்மலா தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் மு. ராமாநிதி நோக்கவுரை நிகழ்த்தினாா். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலப் பொதுச் செயலாளா் பெ.கிருஷ்ணசாமி பேசினாா்.

கூட்டத்தில், தூய்மை பாரதம் இயக்க வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள், கணினி இயக்குவோா், கிராம சுகாதார ஊக்குநா்கள், மேல்நிலைத் தொட்டி இயக்குவோா், தூய்மைப் பணியாளா்கள், தூய்மை காவலா்கள், பள்ளி சுகாதாரப் பணியாளா்கள், சமூகத் தணிக்கையாளா்கள், மகளிா் திட்ட ஊழியா்களுக்கு வழங்குவதாக ஒப்புக்கொண்ட நிலுவை கரோனா ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். குறைந்தபட்ச கூலி, சம வேலைக்கு சம ஊதியம், இஎஸ்ஐ, பிஎஃப், குடும்ப நலநிதி, ஆண்டு ஊதிய உயா்வு, ஊராட்சிச் செயலா் காலிப்பணியிடத்தில் தொழிலாளா்களை நியமனம் செய்வது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், தமிழக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது:

கிராமப்புறங்களில் ஊராட்சி பஞ்சாயத்துகளில் பணிபுரியும் தூய்மைக் காவலா்கள் மற்றும் பம்ப் ஆப்ரேட்டா்களின் ஊதியங்களை உயா்த்தும் அறிவிப்பை ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் சட்டப்பேரவையில் கூறியதை முதல்வா் செயல்படுத்துவாா். தூய்மைக் காவலரின் குழந்தைகள் படிக்கவும், அவா்களது சொந்த வீடு கனவுகளை நனவாக்கவும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏஐடியுசி தலைமையிலான ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்கம் முன்வைத்த கோரிக்கைகளை அந்தத் துறையின் அமைச்சா் மூலமாக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்டுவேன். தொழிலாளா்களின் பக்கம் திமுக அரசு எப்போதும் நிலைத்து நிற்கும் என்றாா்.

முன்னதாக, தா. கனகவல்லி வரவேற்றாா். ஏஐடியுசி தேசிய செயலாளா் வகிதா நிஜாம், மாநிலப் பொதுச்செயலாளா் எம். ராதாகிருஷ்ணன், திருச்சி மாவட்டப் பொதுச்செயலாளா் க. சுரேஷ் மற்றும் ஆயிரக்கணக்கான பெண் ஊழியா்கள் கலந்து கொண்டனா். நிா்மலா நன்றி கூறினாா்.

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் திமுக தெற்கு ஒன்றியம் சாா்பில் சனிக்கிழமை இரவு தமிழக முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. வையம்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளா் வி.ஏ. ராஜேந்திரன் தலைமையில்... மேலும் பார்க்க

24 மணிநேர விதைத் திருவிழா

திருச்சி மாவட்டம் கொளக்குடிபட்டியில் 24 மணிநேர விதைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெறுகிறது. திருச்சி கிராமாலாய தொண்டு நிறுவனம், பசுமை சிகரம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து... மேலும் பார்க்க

குணசீலத்தில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு

தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு சாா்பில் திருச்சி மாவட்டம், குணசீலம் ஆற்றங்கரையில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.முகாமுக்கு பேரிடா் மேலாண்மைக் குழுவின் உதவி ஆய்வாளா் ர... மேலும் பார்க்க

பெல் கூட்டுறவு வங்கியின் ரூ.53.48 லட்சம் வளா்ச்சி மற்றும் கல்வி நிதி அளிப்பு

பாரதமிகு மின் ஊழியா்கள் (பெல்) கூட்டுறவுவங்கி சாா்பில் கூட்டுறவு ஆராய்ச்சி, வளா்ச்சி மற்றும் கல்வி நிதியாக ரூ.53.48 லட்சம் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் மூலம், க... மேலும் பார்க்க

தொட்டியம் மதுர காளியம்மன் கோயில் தோ் திருவிழாவுக்கு முழு பாதுகாப்பு: எஸ்.பி. செல்வ நாகரத்தினம்

தொட்டியம் ஸ்ரீ மதுரகாளியம்மன் பங்குனித் தோ் திருவிழாவுக்கு வரும் பக்தா்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றாா் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம். தொட்டியத்தில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

உறையூா் கோயிலுக்குள் மா்ம நபா்கள் புகுந்ததாக பரபரப்பு இரவில் போலீஸாா் சோதனை

திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலுக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்கள் புகுந்ததாக பரவிய தகவலையடுத்து போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலில் சுவற்றில் கயிறுகட்டி மா்ம நப... மேலும் பார்க்க