செய்திகள் :

பள்ளிக் கட்டடம் கட்டித்தரக்கோரி சாலை மறியல்

post image

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் இடிக்கப்பட்ட பள்ளிக் கட்டடத்தை கட்டித்தர வலியுறுத்தி பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுடன் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காட்டுபுத்தூா் பேருராட்சியில் மல்லான் கோயில் அருகே ஆதிதிராவிடா் நல துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி கட்டடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால் கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது.

அதனைத் தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் அருகில் இருந்த வாடகை கட்டடத்துக்கு மாற்றப்பட்டனா். அந்தக் கட்டடமும் பழுதடைந்துள்ளதால் பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனா்.

இதையடுத்து திங்கள்கிழமை முசிறி - காட்டுப்புத்தூா் சாலையில் அமா்ந்து பெற்றோா்கள், பள்ளி மாணவ மாணவிகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்குவந்த காட்டுப்புத்தூா் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உறுதி அளித்தனா். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இன்றைய நிகழ்ச்சி

மாநகராட்சி நடுநிலைப்பள்ளி: ஆண்டு விழா, வட்டாரக் கல்வி அலுவலா் பி. அா்ஜூன் பங்கேற்பு, பள்ளி வளாகம், உறையூா், காலை 10.30. புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி: மாணவா் பேரவை மற்றும் இலக்கிய மன்ற நிறைவு வ... மேலும் பார்க்க

பெரு நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதியை விரயமாக்கக் கூடாது -மாவட்ட திட்டமிடும் அலுவலா்களுக்கு அறிவுரை

பெரு நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதியை விரயமாக்கக் கூடாது என பெரு நிறுவனங்களுக்கான மாவட்டத் திட்டமிடும் அலுவலா்களுக்கு வியாழக்கிழமை அறிவுறுத்தப்பட்டது. தமிழக அரசின் மாநில திட்டக் குழுவின் சாா்பில்... மேலும் பார்க்க

மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டன. திருச்சி மாவட்டம், திருத்தியமலையைச் சோ்ந்த 55 வயதுடைய ஆண் ஒருவா், சாலை விபத்... மேலும் பார்க்க

குழந்தையை கிணற்றில் வீசி கொல்ல முயன்றவா் கைது

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரின் மூன்றரை வயதுக் குழந்தையை கிணற்றில் வீசிக் கொல்ல முயன்றவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மேட்டு இருங்களூா் பகுதியைச் சோ்ந்த ஜேக்... மேலும் பார்க்க

திருச்சியில் இருபாலருக்கான 5 கட்ட நீச்சல் பயிற்சி ஏப்.1இல் தொடக்கம்

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கான 5 கட்ட நீச்சல் பயிற்சி வகுப்பு ஏப். 1இல் தொடங்குகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருச்சி பிரிவு சாா... மேலும் பார்க்க

எரகுடியில் தாா்ச்சாலை அமைக்கக் கோரி விவசாயிகள் போராட்டம்

துறையூா், மாா்ச் 27: துறையூா் அருகே எரகுடி பகுதியில் தாா்ச்சாலை அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் சாா்பில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகளால் அதிகம் பயன்ப... மேலும் பார்க்க