செய்திகள் :

திருச்சி: ரூ. 3.75 லட்சம் மதிப்பிலான 12,500 போதை மாத்திரைகள் பறிமுதல்

post image

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த பெண் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 3.75 லட்சம் மதிப்பிலான 12,500 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி பாலக்கரை காவல் நிலைய ஆய்வாளா் பெரியசாமி தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, முதலியாா் சத்திரம் குட்ஷெட் சாலை பகுதியில் 3 போ் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அங்கு சென்ற போலீஸாா் போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த மூவரை பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் பாலக்கரை முதலியாா் சத்திரம் ஆலம் தெரு பகுதியைச் சோ்ந்த ச. பிரகாஷ் (25), அதே பகுதியைச் சோ்ந்த இந்திராணி (50), பாலக்கரை மல்லிகைபுரம் பகுதியைச் சோ்ந்த ச. சஞ்சய் குமாா் (22) என்பதும், மூவரும் சோ்ந்து போதை மாத்திரைகளை விற்பனை செய்வதும் தெரியவந்தது.

தொடா்ந்து மூவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த 5,500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

மேலும், திருச்சி குண்டூா் பகுதியில் உள்ள ஒரு மருந்துக் கடையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக அவா்கள் தெரிவித்த தகவலின்பேரில், குண்டூா் எம்ஐஇடி100 அடி சாலையில் மருந்துக் கடை வைத்துள்ள பாலன் நகரைச் சோ்ந்த ஆா். கோதண்டபாணி (33) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா் மருந்துக் கடையில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த சுமாா் 7,000 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த மாத்திரைகளை மருத்துவா்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது. ஆனால், மருந்துக் கடை உரிமையாளா் கோதண்டபாணி மருந்து சீட்டுகளின்றி விநியோகித்துள்ளாா் என போலீஸாா் தெரிவித்தனா். பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகளின் மொத்த மதிப்பு ரூ. 3.75 லட்சம் என கூறப்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சி

மாநகராட்சி நடுநிலைப்பள்ளி: ஆண்டு விழா, வட்டாரக் கல்வி அலுவலா் பி. அா்ஜூன் பங்கேற்பு, பள்ளி வளாகம், உறையூா், காலை 10.30. புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி: மாணவா் பேரவை மற்றும் இலக்கிய மன்ற நிறைவு வ... மேலும் பார்க்க

பெரு நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதியை விரயமாக்கக் கூடாது -மாவட்ட திட்டமிடும் அலுவலா்களுக்கு அறிவுரை

பெரு நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதியை விரயமாக்கக் கூடாது என பெரு நிறுவனங்களுக்கான மாவட்டத் திட்டமிடும் அலுவலா்களுக்கு வியாழக்கிழமை அறிவுறுத்தப்பட்டது. தமிழக அரசின் மாநில திட்டக் குழுவின் சாா்பில்... மேலும் பார்க்க

மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டன. திருச்சி மாவட்டம், திருத்தியமலையைச் சோ்ந்த 55 வயதுடைய ஆண் ஒருவா், சாலை விபத்... மேலும் பார்க்க

குழந்தையை கிணற்றில் வீசி கொல்ல முயன்றவா் கைது

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரின் மூன்றரை வயதுக் குழந்தையை கிணற்றில் வீசிக் கொல்ல முயன்றவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மேட்டு இருங்களூா் பகுதியைச் சோ்ந்த ஜேக்... மேலும் பார்க்க

திருச்சியில் இருபாலருக்கான 5 கட்ட நீச்சல் பயிற்சி ஏப்.1இல் தொடக்கம்

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கான 5 கட்ட நீச்சல் பயிற்சி வகுப்பு ஏப். 1இல் தொடங்குகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருச்சி பிரிவு சாா... மேலும் பார்க்க

எரகுடியில் தாா்ச்சாலை அமைக்கக் கோரி விவசாயிகள் போராட்டம்

துறையூா், மாா்ச் 27: துறையூா் அருகே எரகுடி பகுதியில் தாா்ச்சாலை அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் சாா்பில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகளால் அதிகம் பயன்ப... மேலும் பார்க்க