செய்திகள் :

'ஆர்எஸ்எஸ் கைகளில் கல்வி இருந்தால் இந்த நாடு அழிந்துவிடும்' - ராகுல் காந்தி

post image

ஆர்எஸ்எஸ் கைகளில் கல்வி முறை இருந்தால் இந்த நாடு அழிந்துவிடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

தில்லியில் புதிய கல்விக் கொள்கை, யுஜிசியின் புதிய விதிகள், வினாத்தாள் கசிவு உள்ளிட்டவற்றுக்கு எதிராக இந்திய தேசிய மாணவர் சங்கம் இன்று(மார்ச் 22) போராட்டம் நடத்தியது.

இதில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,

"இந்திய கல்விமுறையை அழிக்க ஆர்எஸ்எஸ் முயற்சி செய்து வருகிறது. நம்முடைய கல்விமுறை அவர்களது கைகளுக்குச் சென்றால் இந்த நாடு அழிந்துவிடும், வேலைவாய்ப்பும் இல்லாமல் போய்விடும்.

ஏனெனில் ஆர்எஸ்எஸ்ஸால் பரிந்துரை செய்யப்பட்டவர்கள்தான் இப்போது இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக உள்ளனர். ​​மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் எல்லாருமே ஆர்எஸ்எஸ்ஸால் பரிந்துரை செய்யப்பட்டவர்கள்.

தற்போது நாட்டின் மிகப்பெரும் பிரச்னை வேலைவாய்ப்பின்மைதான். சில நாள்களுக்கு முன்பு பிரதமர் மோடி, கும்பமேளா குறித்துப் பேசினார். ஆனால் வேலைவாய்ப்பின்மை குறித்து அவர் பேச வேண்டும்.

பாஜக - ஆர்எஸ்எஸ் மாடல், அம்பானி மற்றும் அதானிக்கு ஒட்டுமொத்த வளத்தையும் வழங்க நினைக்கிறது. அதனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்" என்று பேசினார்.

இதையும் படிக்க | சென்செக்ஸ் 78,000 புள்ளிகளைக் கடந்து சாதனை! 23,700 புள்ளிகளில் நிஃப்டி!

மனிதாபிமானமற்ற அணுகுமுறை! அலாகாபாத் நீதிமன்ற தீர்ப்பு நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

குழந்தையின் மார்பகங்களைப் பிடிப்பது, பைஜாமா நாடாவை அவிழ்ப்பது பாலியல் வன்கொடுமை முயற்சி குற்றத்தின் கீழ் வராது என்ற அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தர... மேலும் பார்க்க

முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானது உத்தரப் பிரதேசம்: யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேசம் முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை தெரிவித்தார்.ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் சிறப்பு நேர்க்காணலில் பங்கேற்ற உத்தரப் பிரதேச முதல்வர... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் வீட்டில் குற்றப் புலனாய்வுத் துறை சோதனை!

சத்தீஸ்கரில் முன்னாள் முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகேலின் வீடு உள்பட பல இடங்களில் மத்திய புலனாய்வுத் துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தினர். குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ராய்... மேலும் பார்க்க

சோனியா, ராகுல் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் எழுதியுள்ள புத்தகத்தை சுட்டிக் காட்டியுள்ள பாஜக, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும்... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு சிகிச்சை மறுத்தால் தில்லி அப்போலோ மருத்துவமனையைக் கைப்பற்ற உத்தரவிட நேரிடும்: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்காவிட்டால், தில்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலா மருத்துவமனையைக் கைப்பற்றுமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட நேரிடும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை எச்சரித்தது... மேலும் பார்க்க

கச்சத்தீவு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் செப்.15-இல் இறுதி விசாரணை

நமது நிருபர்கச்சத்தீவு தொடர்பாக இந்தியா- இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணைக்காக வரும் செப்.15-ஆம் தேதிக்கு வழக்கை பட்டியலிட உச்சநீதிமன்றம் செவ்வாய்க... மேலும் பார்க்க