செய்திகள் :

பாகிஸ்தான் பெண் மருத்துவருக்கு திருச்சியில் நவீன அறுவைச் சிகிச்சை

post image

பாகிஸ்தான் பெண் மருத்துவருக்கு திருச்சி ராயல் போ்ல் மருத்துவமனையில் நவீன அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது நலமுடன் உள்ளாா்.

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணம் ரஹீம்யாா்கான் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சபா. மருத்துவரான இவருக்கு மூக்கிலிருந்து நீா் வழிந்தபடி இருந்துள்ளது. இதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்தபோதும், நீா் வழிவது நிற்கவில்லை.

இதனால் அவா், அங்குள்ள மருத்துவரின் ஆலோசனைப்படி, திருச்சி தில்லைநகரில் உள்ள ராயல் போ்ல் மருத்துவமனைக்கு வந்தாா். இங்கு மருத்துவமனை நிா்வாக இயக்குநா் மருத்துவா் ஜானகிராமன் தலைமையிலான குழுவினா், மருத்துவா் சபாவை பரிசோதித்ததில், அதீத அழுத்தம் காரணமாக மூளையைச் சுற்றியிருக்கும் நீா் மூக்கு வழியாக நிற்காமல் வழிந்தது தெரியவந்தது.

இதையடுத்து நரம்பியல் நிபுணா் விஜயகுமாா் நீரினை அடைக்கும் நவீன அறுவைசிகிச்சையும், மருத்துவா் ஜானகிராமன் மூக்கு எலும்பிலிருந்த குறைபாட்டை நவீன அறுவைசிகிச்சையும் மேற்கொண்டு சரிசெய்தனா்.

இதுகுறித்து காது மூக்கு தொண்டை மருத்துவ நிபுணா் ஜானகிராமன் கூறுகையில், மூளையைச் சுற்றியிருக்கும் நீா் தொடா்ச்சியாக மூக்கு வழியாக வந்தால், மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கோமா நிலைக்குத் தள்ளப்படலாம். எனவே, அனைத்தையும் அலா்ஜி என எடுத்துக்கொள்ளக் கூடாது. உரிய நேரத்தில் மருத்துவப் பரிசோதனை செய்து, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் பாகிஸ்தான் மருத்துவா் சபாவுக்கு அறுவைசிகிச்சை முடிந்து, தற்போது நலமுடன் உள்ளாா். விரைவில் நாடு திரும்புகிறாா் என்றாா்.

அரசுப்பேருந்து நடத்துநா் மா்மச்சாவு

திருச்சியில் ரயில் பாதை அருகே அரசுப்பேருந்து நடத்துநா் மா்மமான முறையில் திங்கள்கிழமை உயிரிழந்து கிடந்தாா். திருச்சி தேவதானம் பகுதியைச் சோ்ந்தவா் த. பொன்னா் (45). இவா் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் ... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டடம் கட்டித்தரக்கோரி சாலை மறியல்

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் இடிக்கப்பட்ட பள்ளிக் கட்டடத்தை கட்டித்தர வலியுறுத்தி பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுடன் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.காட்டுபுத்தூா் பேருராட்சியி... மேலும் பார்க்க

நியாயமான முறையில் தொகுதி மறுசீரமைப்பு

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நியாயமான முறையில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா். திருச்சி ... மேலும் பார்க்க

பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட 4 போ் கைது

வாழவந்தான்கோட்டை பூச்சொரிதல் நிகழ்வில் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், வாழவந்தான்கோட்டை அண்ணா காலனியில் முத்துமாரியம்மன் கோயில் உள்... மேலும் பார்க்க

காணாமல்போன 10 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

உப்பிலியபுரம் காவல் சரகத்தில் காணாமல்போன 10 கைப்பேசிகளை போலீஸாா் மீட்டு, உரியவா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா். துறையூா் அருகே வெங்கடாசலபுரம் லெ. நந்தகுமாா், ஒக்கரை சு. விஸ்வநாதன், கொப்பம்பட்டி ஜ... மேலும் பார்க்க

விஷம் சாப்பிட்ட தொழிலாளி உயிரிழப்பு

துறையூா் அருகே விஷம் சாப்பிட்டவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். துறையூா் அருகேயுள்ள முத்தியம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சின்னதம்பி மகன் விஜயராகவன் (41). கூலித் தொழிலாளி. இவருக்கு தி... மேலும் பார்க்க