செய்திகள் :

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு: வெளியானது அறிவிக்கை

post image

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம், படிகள், ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை உயர்த்தி வழங்குவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியச் சட்டம், 1954-ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது, மேலும் இது வருமான வரிச் சட்டம், 1961, கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி செலவு பணவீக்கக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு மாற்றியமைக்ப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை வெளியிட்டிருக்கும் இந்த அறிவிக்கையில் புதிதாக மாற்றியமைக்கப்பட்டிருக்கும் ஊதிய விவரங்கள்..

ஊதியம்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1,24,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தினசர படி

எம்.பி.க்களின் தினசரி படி ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஓய்வூதியம்

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரூ.25,000-லிருந்து ரூ.31,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கூடுதல் ஓய்வூதியம்

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களின் கூடுதல் ஓய்வூதியம் ரூ.2,000-லிருந்து ரூ.2,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகன் கொடுத்த யோசனை: மியாசாகி மாம்பழத்தால் லட்சாதிபதியான விவசாயி

ஜப்பானில் விளையும் தனித்துவமான மியாசாகி மாம்பழக் கன்றுகளை வாங்கிவந்து இரண்டு ஆண்டுகளாக பராமரித்து வந்த தெலங்கானா விவசாயி, தற்போது லட்சாதிபதியாகியிருப்பதுதான் வைரலாகியிருக்கிறது.பொதுவாக ஜப்பானில் மட்டு... மேலும் பார்க்க

அமித் ஷாவுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் நிராகரிப்பு!

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக மாநிலங்களவை காங்கிரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ் அளித்த உரிமை மீறல் நோட்டீஸை அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் வியாழக்கிழமை நிராகரித்தார்.காங்கிரஸ் தலைமை கொறடா அ... மேலும் பார்க்க

வயநாட்டில் பிரியங்கா: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு!

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா மூன்று நாள் பயணமாக இன்று வயநாடு வந்துள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். பிரியங்கா காந்தி கண்ணூர் விமான நிலையத்தில் தரையிறங்கி ... மேலும் பார்க்க

கருப்புப் பணத்தை கொண்டுவருவோம் என்றவர்கள் வாட்ஸ்ஆப்-ஐ கண்காணிப்பது ஏன்? காங்கிரஸ்

வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தைக் கொண்டுவருவோம் என்ற கோஷத்தோடு ஆட்சிக்கு வந்தவர்கள் வாட்ஸ்ஆப் சாட்களை கண்காணிக்க விரும்புகிறார்கள் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.ந... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு: நிர்மலா சீதாராமன் சொன்ன தகவல்!

தனிநபர்களின் வாட்ஸ்அப் சாட்கள் மூலம் ரூ.200 கோடி வரி ஏய்ப்புக் கண்டறியப்பட்டதாக வருமான வரி மசோதா மீது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை: அலாகாபாத் உயா்நீதிமன்ற சா்ச்சை கருத்து ‘மனிதத்தன்மையற்றது’ -உச்சநீதிமன்றம் அதிருப்தி

பாலியல் வன்கொடுமை குறித்து விளக்கமளித்து, அலாகாபாத் உயா்நீதிமன்றம் அண்மையில் தெரிவித்த சா்ச்சை கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்தது. இக்கருத்துகள் மனிதத்தன்மையற்றது; இரக்க சிந்தனையில... மேலும் பார்க்க