செய்திகள் :

வயநாட்டில் பிரியங்கா: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு!

post image

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா மூன்று நாள் பயணமாக இன்று வயநாடு வந்துள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

பிரியங்கா காந்தி கண்ணூர் விமான நிலையத்தில் தரையிறங்கி சாலை வழியாக வயநாடு சென்றார். நாடாளுமன்றத்தில் வயநாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரியங்கா, புல்பள்ளியில் உள்ள ஸ்ரீ சீதா தேவி லவ குசா கோயிலில் பிரார்த்தனைகளுடன் தனது பயணத்தைத் தொடங்குவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவரது பயணத் திட்டத்தின்படி, சுல்தான் பத்தேரியின் புல்பள்ளி கிராம பஞ்சாயத்தில் உள்ள புதிய கிராம பஞ்சாயத்து அலுவலக வளாகத்தை அவர் திறந்துவைக்கிறார். பின்னர், அங்கடிசேரியில் ஸ்மார்ட் அங்கன்வாடி, அதிரட்டுக்குன்னுவில் பாசனத் திட்டம், சுல்தான் பத்தேரியின் இருளத்தில் உள்ள சோதனை அணை திறப்பு விழாவிலும் அவர் கலந்துகொள்கிறார்.

ஸ்மார்ட்போன்களில் நேரம் செலவிடும் இந்தியர்களால் வருவாய் அதிகரிப்பு!

இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை வளர்ச்சியடைவதாக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் எர்ன்ஸ் & யங்கின் ஆய்வில் தெரிவித்துள்ளது.இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு த... மேலும் பார்க்க

ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 7 பேர் காயம்

ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் ஏழு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒடிசா மாநிலம், மங்குலி அருகே நிர்குன்டியில் பெங்களூரு-காமாக்யா எக்ஸ்பிரஸ் ... மேலும் பார்க்க

தாணேவில் தடை செய்யப்பட்ட 238 இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல்

தாணேயில் தடை செய்யப்பட்ட 238 கோடீன் இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தின் ஷில் டைகர் பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் இருசக்கர வாகனத்தில் 22 வயது நபரைப் பி... மேலும் பார்க்க

புவனேஸ்வரில் பல்கலை. விடுதியில் முதுகலை மாணவர் சடலம் மீட்பு

புவனேஸ்வரில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் இருந்து முதுகலை மாணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழக விடுதி வளாகத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை காலை முதுகலை மாணவரி... மேலும் பார்க்க

பெங்களூரு ஏசி விரைவு ரயிலில் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!

பெங்களூரு ஏசி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பெங்களூரிலிருந்து தமிழகம், ஆந்திரா வழியாக அஸ்சாம் செல்லும் இந்த ரயில், ஒடிஸாவில் கட்டாக் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் 11 பெட்... மேலும் பார்க்க

மனதின் குரல் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை!

மனதின் குரல் நிகழ்ச்சியில் யோகா நாள், கோடைக்காலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி நாட்ட... மேலும் பார்க்க