செய்திகள் :

இஸ்ரேலின் தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 6 பாலஸ்தீனர்கள் பலி!

post image

காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர்.

வடக்கு காஸாவின் ஜபாலியா பகுதியில் அப்தெல்-லத்தீஃப் அல்-குவானோவா என்பவர் தங்கியிருந்த முகாமின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவர் பலியானதாக ஹமாஸ் கிளர்ச்சிப்படையின் செய்தி தொடர்பாளர் பஸெம் நயிம் தெரிவித்துள்ளார்.

இதேபோல், காஸா பகுதியின் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என மொத்தம் 6 பேர் பலியானதாக காஸாவின் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

முன்னதாக, கடந்த வாரம் ஹமாஸுடனான போர் நிறுத்த ஒப்பந்ததை முறித்து இஸ்ரேல் ராணுவம் காஸாவின் மீது நடத்திய திடீர் தாக்குதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ஹமாஸ் படையிடம் மீதமுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்கப்படவில்லை என்றால் இந்தத் தாக்குதலானது மேலும் அதிகரிக்கக் கூடும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

இருப்பினும், ஹமாஸ் தரப்பில் தங்களிடம் மீதமுள்ள 59 பிணைக் கைதிகள் இஸ்ரேல் படைகள் காஸாவை விட்டு வெளியேறி போர் நிறுத்தம் நீடித்தால் மட்டுமே விடுவிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், அதில் 24 பேர் மட்டுமே தற்போது உயிரோடு இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதையும் படிக்க: அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு! 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி!

7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி,கன்னியாகுமரி,போளூர், செங்கம், சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி, பெருந்துறை ஆகிய 7 ... மேலும் பார்க்க

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி ஓட்டு கேட்க முடியாது! - துரைமுருகன்

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி யாரும் இங்கு வாக்கு சேகரிக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய ரூ. 4,034 கோடியை ... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

மியான்மர், தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குள்ள தமிழர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி தேவைப்படுவோர் - 1800 309 3793+91 80690 099... மேலும் பார்க்க

சமூக நீதியை நிலைநாட்டும் அரசு! - ஆதி திராவிடர், பழங்குடியினர் நலக் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனை மேம்படுத்தும் பொருட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல... மேலும் பார்க்க

தென் கொரிய காட்டுத் தீ: நெருப்பில் சடங்கு செய்த நபர் காரணமா?

தென் கொரியாவில் காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தென் கொரியாவின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத... மேலும் பார்க்க

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்!

லெபனான் நாட்டு தலைநகரின் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் கடைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் த... மேலும் பார்க்க