செய்திகள் :

வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு: நிர்மலா சீதாராமன் சொன்ன தகவல்!

post image

தனிநபர்களின் வாட்ஸ்அப் சாட்கள் மூலம் ரூ.200 கோடி வரி ஏய்ப்புக் கண்டறியப்பட்டதாக வருமான வரி மசோதா மீது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

60 ஆண்டுகள் பழைமையான வருமான வரிச் சட்டத்துக்கு மாற்றாக புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிய வருமான வரி மசோதா, 2025-ஐ ஆதரித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், வாட்ஸ்ஆப் சாட்கள் மூலம் கணக்கில் வராத ரூ.200 கோடி பணம் கண்டறியப்பட்டு வரி ஏய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருப்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது.

அது மட்டுமல்லாமல், கூகுள் மேப் பயன்படுத்தியதன் அடிப்படையில் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இன்ஸ்டாகிராம் கணக்குகள் மூலம் பினாமி சொத்துகளின் உரிமையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மக்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பயன்படுத்த அதிகாரம் அளிப்பதன் மூலம், மிகவும் தீவிரமான வரி ஏய்ப்புகள் மற்றும் நிதி முறைகேடுகள் பலவும் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்படுகிறது என்றார்.

கிரிப்டோகரன்சி மூலம் நடக்கும் முறைகேடுகளைக் கண்டறிய, வரித்துறை அதிகாரிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகிறது என்றும், புதிய வருமான வரிச் சட்டம் கொண்டுவரப்பட்டால், அது மின்னஞ்சல், வாட்ஸ்ஆப், டெலிகிராம் மற்றும் வணிக மென்பொருள்கள், சர்வர்களையும் பயன்படுத்தி, மறைக்கப்பட்டிருக்கும் நிதிகளை வெளிக்கொணர உதவும் என்று குறிப்பிட்டிருந்தார்.

தனிநபர்களின் வாட்ஸ்ஆப் சாட்களை மத்திய அரசு படித்திருப்பதாக நிதியமைச்சர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்மார்ட்போன்களில் நேரம் செலவிடும் இந்தியர்களால் வருவாய் அதிகரிப்பு!

இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை வளர்ச்சியடைவதாக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் எர்ன்ஸ் & யங்கின் ஆய்வில் தெரிவித்துள்ளது.இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு த... மேலும் பார்க்க

ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 7 பேர் காயம்

ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் ஏழு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒடிசா மாநிலம், மங்குலி அருகே நிர்குன்டியில் பெங்களூரு-காமாக்யா எக்ஸ்பிரஸ் ... மேலும் பார்க்க

தாணேவில் தடை செய்யப்பட்ட 238 இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல்

தாணேயில் தடை செய்யப்பட்ட 238 கோடீன் இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தின் ஷில் டைகர் பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் இருசக்கர வாகனத்தில் 22 வயது நபரைப் பி... மேலும் பார்க்க

புவனேஸ்வரில் பல்கலை. விடுதியில் முதுகலை மாணவர் சடலம் மீட்பு

புவனேஸ்வரில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் இருந்து முதுகலை மாணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழக விடுதி வளாகத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை காலை முதுகலை மாணவரி... மேலும் பார்க்க

பெங்களூரு ஏசி விரைவு ரயிலில் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!

பெங்களூரு ஏசி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பெங்களூரிலிருந்து தமிழகம், ஆந்திரா வழியாக அஸ்சாம் செல்லும் இந்த ரயில், ஒடிஸாவில் கட்டாக் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் 11 பெட்... மேலும் பார்க்க

மனதின் குரல் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை!

மனதின் குரல் நிகழ்ச்சியில் யோகா நாள், கோடைக்காலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி நாட்ட... மேலும் பார்க்க