செய்திகள் :

ஜெர்மனி, ஆஸ்திரியா அமைச்சர்களின் சிரியா பயணம் ரத்து!

post image

ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் சிரியா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் நான்சி ஃபேஸர் மற்றும் ஆஸ்திரியா நாட்டின் உள்துறை அமைச்சரான கெர்ஹார்டு கார்னர் ஆகியோர் ஜெர்மன் ராணுவ விமானத்தில் ஜோர்டானிலிருந்து சிரியாவிற்கு இன்று (மார்ச் 27) காலை பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த விமானம் ஜோர்டான் தலைநகர் அம்மானிலிருந்து புறப்படும் முன்னர் பாதுகாப்பு காரணங்களினால் அவர்களது பயணமானது ரத்து செய்யப்பட்டதாக ஜெர்மனி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சிரியாவில் தீவிரவாத தாக்குதல் நடைபெறக்கூடும் என ஜெர்மன் பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையான எச்சரித்ததைத் தொடர்ந்து இந்தப் பயணமானது ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதை நிராகரிக்க முடியாது எனவும் இத்தகைய அச்சுறுத்தலுடன் அவர்களது பயணத்தை தொடர்வது பொறுப்பான முடிவாக இருக்காது என ஜெர்மன் வெளியுறவுத் துறை குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பயணமானது முன்கூட்டியே அறிவிக்கப்படாத நிலையில், இரு நாடுகளின் அமைச்சர்களும் சிரியாவின் இடைக்கால அரசின் அமைச்சர்கள் மற்றும் ஐ.நா. நிவாரண அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தனர்.

முன்னதாக, கடந்த 14 ஆண்டுகளாக சிரியாவில் நடைபெற்று வந்த உள்நாட்டு போரினால் அந்நாட்டு மக்கள் பெரும்பாலானோர் ஜெர்மனியில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், சுமார் 13 ஆண்டுகள் கழித்து கடந்த வாரம் சிரியாவில் ஜெர்மனியின் தூதரகத்தை ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சர் அன்னாலேனா பேர்போக் மீண்டும் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இஸ்ரேலின் தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 6 பாலஸ்தீனர்கள் பலி!

7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி,கன்னியாகுமரி,போளூர், செங்கம், சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி, பெருந்துறை ஆகிய 7 ... மேலும் பார்க்க

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி ஓட்டு கேட்க முடியாது! - துரைமுருகன்

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி யாரும் இங்கு வாக்கு சேகரிக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய ரூ. 4,034 கோடியை ... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

மியான்மர், தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குள்ள தமிழர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி தேவைப்படுவோர் - 1800 309 3793+91 80690 099... மேலும் பார்க்க

சமூக நீதியை நிலைநாட்டும் அரசு! - ஆதி திராவிடர், பழங்குடியினர் நலக் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனை மேம்படுத்தும் பொருட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல... மேலும் பார்க்க

தென் கொரிய காட்டுத் தீ: நெருப்பில் சடங்கு செய்த நபர் காரணமா?

தென் கொரியாவில் காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தென் கொரியாவின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத... மேலும் பார்க்க

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்!

லெபனான் நாட்டு தலைநகரின் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் கடைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் த... மேலும் பார்க்க