ஜிப்லியால் உறக்கமின்றி தவிக்கும் ஊழியர்கள்! சாட் ஜிபிடி நிறுவனர் வேண்டுகோள்!
ஜெர்மனி, ஆஸ்திரியா அமைச்சர்களின் சிரியா பயணம் ரத்து!
ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் சிரியா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் நான்சி ஃபேஸர் மற்றும் ஆஸ்திரியா நாட்டின் உள்துறை அமைச்சரான கெர்ஹார்டு கார்னர் ஆகியோர் ஜெர்மன் ராணுவ விமானத்தில் ஜோர்டானிலிருந்து சிரியாவிற்கு இன்று (மார்ச் 27) காலை பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த விமானம் ஜோர்டான் தலைநகர் அம்மானிலிருந்து புறப்படும் முன்னர் பாதுகாப்பு காரணங்களினால் அவர்களது பயணமானது ரத்து செய்யப்பட்டதாக ஜெர்மனி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சிரியாவில் தீவிரவாத தாக்குதல் நடைபெறக்கூடும் என ஜெர்மன் பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையான எச்சரித்ததைத் தொடர்ந்து இந்தப் பயணமானது ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதை நிராகரிக்க முடியாது எனவும் இத்தகைய அச்சுறுத்தலுடன் அவர்களது பயணத்தை தொடர்வது பொறுப்பான முடிவாக இருக்காது என ஜெர்மன் வெளியுறவுத் துறை குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பயணமானது முன்கூட்டியே அறிவிக்கப்படாத நிலையில், இரு நாடுகளின் அமைச்சர்களும் சிரியாவின் இடைக்கால அரசின் அமைச்சர்கள் மற்றும் ஐ.நா. நிவாரண அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
முன்னதாக, கடந்த 14 ஆண்டுகளாக சிரியாவில் நடைபெற்று வந்த உள்நாட்டு போரினால் அந்நாட்டு மக்கள் பெரும்பாலானோர் ஜெர்மனியில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், சுமார் 13 ஆண்டுகள் கழித்து கடந்த வாரம் சிரியாவில் ஜெர்மனியின் தூதரகத்தை ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சர் அன்னாலேனா பேர்போக் மீண்டும் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இஸ்ரேலின் தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 6 பாலஸ்தீனர்கள் பலி!