செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பு: பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்!

post image

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஓய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் அடுத்தாண்டு தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இந்தநிலையில் சென்னையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஏழு மாநிலங்களின் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடனான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்பட 7 மாநில முதல்வர் மற்றும் கட்சி நிர்வாகிகள் என 24 பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்காத ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டி தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

மக்கள் வளா்ச்சிக்கான புத்தாக்க அமைப்பை இளைஞா்கள் உருவாக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மக்கள் வளா்ச்சிக்குப் பயன்படும் வகையில் புதிய சிந்தனைகளின் அடிப்படையிலான புத்தாக்க அமைப்பு முறையை இளைஞா்கள் உருவாக்க வேண்டும் என மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தாா். கு... மேலும் பார்க்க

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தற்கொலையா? விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது சிபிஐ!

நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்த வழக்கின் விசாரணை அறிக்கையை மத்திய குற்ற புலனாய்வு (சிபிஐ) பிரிவு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சீல் செய்யப்பட்ட கவரில் சனிக... மேலும் பார்க்க

நீதிபதி வீட்டில் கணக்கில் வராத பணம் இருந்ததா? 3 நீதிபதிகள் கொண்ட குழு விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

புது தில்லி: பண சா்ச்சையில் சிக்கியுள்ள நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டிலிருந்து கோடிக்கணக்கிலான தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா என்பதை விரிவாக விசாரித்து உண்மையை கண்டறிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வழிகா... மேலும் பார்க்க

ஒடிசா: மழை, ஆலங்கட்டி மழைக்கு 2 பேர் பலி, 600 வீடுகள் சேதம்

ஒடிசாவில் மழை, ஆலங்கட்டி மழைக்கு 2 பேர் பலியானதோடு 67 பேர் காயமடைந்தனர். ஒடிசா மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு இடியுடன் கூடிய மழை பெய்தது. மழையோடு ஆலங்கட்டி மழையும் பெய்ததால் மக்கள் கடும் அவ... மேலும் பார்க்க

மணிப்பூரில் இருந்து 27 மியான்மர் நாட்டவர் நாடு கடத்தல்

மணிப்பூரில் சட்டவிரோதமாக நுழைந்த 27 மியான்மர் நாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.மணிப்பூர் மாநிலம், தெங்னௌபால் மாவட்டத்தில் உள்ள மோரேயில் உள்ள இந்தோ - மியான்மர் வாயிலில... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் கருகிய நிலையில் இரட்டை குழந்தைகள், பெண்ணின் சடலங்கள் மீட்பு

ஜார்க்கண்டில் கருகிய நிலையில் பெண் மற்றும் அவரின் இரட்டை குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 22 வயது பெண் ம... மேலும் பார்க்க