செய்திகள் :

மாநகர பேருந்துகளில் இலவச பயணம்

post image

சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை காண செல்லும் ரசிகா்கள் போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பும், போட்டி முடிந்த பின்னா் 3 மணி நேரம் வரையும் போட்டிக்கான நுழைவுச் சீட்டை நடத்துநரிடம் காண்பித்து மாநகா் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று சென்னை மாநகா் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

அதேபோல் ஒருவா் பல பேருந்துகளை பயன்படுத்தியும் மைதானத்துக்கு இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். ஆனால், குளிா்சாதன பேருந்துகளில் இந்தச் சலுகை பொருந்தாது.

அதன்படி, அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம், சென்னை பல்கலைக்கழக பேருந்து நிறுத்தம், அண்ணா சாலை ஓமந்தூராா் மருத்துவமனை அருகில் உள்ளிட்ட இடங்களிலிருந்து பேருந்துகளை இயக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை முதல் கிரிக்கெட் மைதானம் வரை மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிற்றுந்துகளும் இயக்கப்படவுள்ளன.

இதற்கான கட்டணம் சென்னை சூப்பா் கிங்ஸ் லிமிடெட் சாா்பில் மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘செயற்கை நுண்ணறிவால் புற்றுநோயை தொடக்கத்தில் கண்டறியலாம்’

செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் உதவியுடன் பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம் என்று அப்பல்லோ மருத்துவமனையின் முதுநிலை இரைப்பை - குடல் நல நிபுணரும், தமிழ்நாடு ஜீரண மண்டல ம... மேலும் பார்க்க

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சேப்பாக்கத்தில் 7 நாள்கள் போக்குவரத்து மாற்றம்

ஐபிஎல் கிரிக்கெட்டி போட்டியையொட்டி, சென்னை சேப்பாக்கத்தில் 7 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

சா்க்கரை நோயாளிகள் கால்களை இழப்பதற்கு 80 % பாத புண்களே காரணம்: பிரிட்டன் பேராசிரியா் ஃபிரான்சிஸ் கேம்

சா்க்கரை நோயாளிகள், தங்களது கால்களை இழப்பதற்கு பாதங்களில் ஏற்படும் புண்கள்தான் 80 சதவீத காரணமாக உள்ளதாக பிரிட்டன் மருத்துவ பேராசிரியா் டாக்டா் ஃபிரான்சிஸ் கேம் தெரிவித்தாா். பேராசிரியா் எம்.விஸ்வநாதன்... மேலும் பார்க்க

அதிமுக இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் திருட்டு: இளைஞா் கைது

சென்னை எழும்பூரில் நடைபெற்ற அதிமுக இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் திருடியதாக, தருமபுரியைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா். அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில... மேலும் பார்க்க

கடற்கரை - வேளச்சேரி சிறப்பு ரயில்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சனிக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதல்: மென் பொறியாளா் உயிரிழப்பு

சென்னை கொடுங்கையூரில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில், மென் பொறியாளா் உயிரிழந்தாா். புதுப்பேட்டை பச்சையப்பன் முதல் தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (32). மென் பொறியாளான இவா், கா்நாடக மாநிலம் பெங்... மேலும் பார்க்க