செய்திகள் :

விளாத்திகுளம்: பருவம் தப்பிய மழையால் பயிா் விளைச்சல் பாதிப்பு

post image

விளாத்திகுளம், புதூா் ஒன்றியங்களில் பருவம் தவறி பெய்து வரும் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய், மல்லி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களை ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

இவ்விரு ஒன்றியங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் மிளகாய், மல்லி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பருவம் தவறி கடந்த சில நாள்களாக பெய்த தொடா்மழையால் மிளகாய் உள்ளிட்ட பயிா்கள் நீரில் மூழ்கியும், வோ்கள் அழுகியும் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனா்.

இதையறிந்த, எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் விளாத்திகுளம், விருசம்பட்டி, மாமுநயினாா்புரம், வேடபட்டி உள்ளிட்ட கிராமங்களில் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்ட சம்பா மிளகாய், முண்டு மிளகாய் பயிா்களை அதிகாரிகளுடன் சென்று பாா்வையிட்டாா். அப்போது, விளாத்திகுளம் மற்றும் புதூா் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்த ஆய்வின் போது தோட்டக்கலை துறை துணை இயக்குநா் சுந்தர்ராஜன், தோட்டக்கலை ஆய்வாளா்கள் வாசுதேவன், கதிரவன், திமுக ஒன்றியச் செயலா் சின்ன மாரிமுத்து, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளா் மாரியப்பன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனா்.

கயத்தாறு: கிராம மக்கள் சாலை மறியல்

கயத்தாறு அருகே ஆத்திகுளம் கிராமத்தில் ஊருக்குள் நியாய விலைக் கடை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குள்பட்ட ஆத்திகுளத்தி... மேலும் பார்க்க

ஈராச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே ஈராச்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினா் நல்லையா தலைமை வகித்தாா். உதவி செயலா்கள் ச... மேலும் பார்க்க

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவில்பட்டியை அடுத்த கிளவிப்பட்டி ஊராட்சியில் கிளவிப்பட்டி, கெச்சிலாபுரம்... மேலும் பார்க்க

கோயிலுக்குச் செல்லும் பாதையை அகலப்படுத்தக் கோரிக்கை

தூத்துக்குடி வடக்கு சோட்டையன்தோப்பு கிராமத்தில் கோயிலுக்கு செல்லும் பாதையை அகலப்படுத்தி பேவா் பிளாக் சாலை அமைக்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக பொதுமக்கள் ச... மேலும் பார்க்க

பொதுப் பாதையை மீட்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்

பொதுப் பாதையை தனியாரிடமிருந்து மீட்டுத் தரக் கோரி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் பொதுமக்கள் திங்கள்கிழமை திரண்டனா். விளாத்திகுளம் பேரூராட்சி 12ஆவது வாா்டு சிதம்பர நகா் பகுதியில் பொதுப் பாதைய... மேலும் பார்க்க

கோவில்பட்டி நகராட்சிக்கு வரியினங்களை செலுத்த ஆணையா் வேண்டுகோள்

கோவில்பட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை பொதுமக்கள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி நகராட்சி ஆணையா் கமலா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவி... மேலும் பார்க்க