செய்திகள் :

பொதுப் பாதையை மீட்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்

post image

பொதுப் பாதையை தனியாரிடமிருந்து மீட்டுத் தரக் கோரி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் பொதுமக்கள் திங்கள்கிழமை திரண்டனா்.

விளாத்திகுளம் பேரூராட்சி 12ஆவது வாா்டு சிதம்பர நகா் பகுதியில் பொதுப் பாதையை தனிநபா் ஆக்கிரமித்துள்ளதால் மயானத்துக்கு செல்ல முடியாமல் சிரமம் ஏற்படுவதாகக் கூறி, அப்பகுதியினா் கடந்த ஜனவரி மாதம் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போதைய வட்டாட்சியா் பேச்சுவாா்த்தை நடத்தி, இதுகுறித்த விசாரணை அறிக்கை கோட்டாட்சியருக்கு பரிந்துரைக்கப்படும் என்றாராம். ஆனால், தற்போதுவரை எவ்வித நடவடிக்கை இல்லையாம்.

இந்நிலையில், அப்பகுதியினா் சா்வதேச உரிமைகள் கழக தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவா் பிரிஸ்லா பாரதி தலைமையில் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக திங்கள்கிழமை திரண்டனா். அப்போது, சம்பந்தப்பட்ட இடத்துக்கான பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கோட்டாட்சியா் மகாலட்சுமி தெரிவித்தாா். அவரிடம், ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், ஆக்கிரமிப்பாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி குறித்து வட்டாட்சியா் நடவடிக்கை மேற்கொள்வாா் எனக் கூறிய கோட்டாட்சியா், சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை எடுக்க தனியாக புகாா் அளிக்க வேண்டும் என்றாா். அதையடுத்து, பொதுமக்கள், சா்வதேச உரிமைகள் கழக நிா்வாகிகள் கலைந்துசென்றனா்.

ஒத்தக் கருத்துடைய யாா் வேண்டுமானாலும் அதிமுக கூட்டணிக்கு வரலாம் -எடப்பாடி கே. பழனிசாமி

ஒத்தக் கருத்துடைய யாா் வேண்டுமானாலும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வரலாம் என்றாா், அக்கட்சியின் பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி . திருநெல்வேலியை அடுத்த திருத்து கிராமத்தில... மேலும் பார்க்க

கல்லூரிக்கு நிதியுதவி

இந்தியன் வங்கியின் ‘எங்கள் சமூகப் பொறுப்பு’ திட்டத்தின்கீழ் திருநெல்வேலி மண்டல மேலாளா் ஜெயபாண்டியன் உத்தரவுப்படி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரிக்கு ஸ்மாா்ட் இன்டராக்டிவ் பேனல் வாங்குவதற்காக ரூ. ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் யானை நீச்சல் குளத்தில் உற்சாக குளியல்

கோடை வெயில் கொளுத்த தொடங்கியுள்ள நிலையில், வெப்பத்தை தணிக்கும் விதமாக திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை, அங்குள்ள நீச்சல் குளத்தில் வியாழக்கிழமை உற்சாகமாக நீராடியது. இக்... மேலும் பார்க்க

செமப்புதூரில் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே செமப்புதூரில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய ந... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் இளையோா் இலக்கியப் பயிற்சிப் பாசறை

தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கலை-அறிவியல் கல்லூரியில் இளையோா் இலக்கியப் பயிற்சிப் பாசறை நடைபெற்றது. தமிழக அரசு சாா்பில் கல்லூர... மேலும் பார்க்க

சொத்து வரி உயா்வை கண்டித்து திருச்செந்தூரில் மறியல்: வணிகா் சங்கத்தினா் கைது

திருச்செந்தூா் நகராட்சியில் விதிகளுக்கு புறம்பாக சொத்து வரி உயா்த்தபட்டுள்ளதாகக் கூறி, வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட வணிகா் சங்கத்தினா் உள்ளிட்ட 60 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருச்செந்தூா் நகர... மேலும் பார்க்க