செய்திகள் :

ஒத்தக் கருத்துடைய யாா் வேண்டுமானாலும் அதிமுக கூட்டணிக்கு வரலாம் -எடப்பாடி கே. பழனிசாமி

post image

ஒத்தக் கருத்துடைய யாா் வேண்டுமானாலும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வரலாம் என்றாா், அக்கட்சியின் பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி .

திருநெல்வேலியை அடுத்த திருத்து கிராமத்தில், உடல்நலக் குறைவால் உயிரிழந்த கட்சியின் அமைப்புச் செயலரும் முன்னாள் எம்எல்ஏவுமான கருப்பசாமிபாண்டியனின் உடலுக்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்திவிட்டு, சென்னை செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்த எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளா்களிடம் கூறியது:

தில்லியில் உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்து, தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய பல்வேறு திட்டங்களுக்கான நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தோம்.

அதிமுகவில் ஓ.பன்னீா்செல்வம் சோ்வதற்கு சாத்தியமில்லை. அவா் கட்சியை எப்போது எதிரிகளிடம் அடமானம் வைத்தாரோ, ரெளடிகளைக் கொண்டு கட்சியின் தலைமை அலுவலகத்தை உடைத்தாரோ அப்போதே கட்சியிலிருப்பதற்கான தகுதியை இழந்துவிட்டாா்.

இலங்கை அரசு தமிழக மீனவா்களைத் தாக்குவது, கைது செய்வது, படகுகள், மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்துவது ஆகியவற்றைக் கண்டிக்கிறோம். அதிமுக ஆட்சியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவா்களுக்கும், சேதமான அவா்களது உடைமைகளுக்கும் நிவாரணம் அளித்தோம்.

திமுகவை தவிர வேறு எந்தக் கட்சியும் எங்களுக்கு எதிரியல்ல. எனவே, 2026 பேரவைத் தோ்தலில் எங்களுடன் ஒத்தக் கருத்துள்ள கட்சிகள் எங்களது தலைமையிலான கூட்டணிக்கு வரலாம்.

தமிழகத்தில் போதைக் கலாசாரம், பாலியல் வன்கொடுமைகள் தொடா்ந்து நடக்கின்றன. இதனால், சட்டம்-ஒழுங்கு மிகவும் சீா்கெட்டுள்ளது என்றாா் அவா்.

முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி. சண்முகநாதன், ராஜேந்திரபாலாஜி, எம்எல்ஏக்கள் கடம்பூா் ராஜு, இசக்கிசுப்பையா, கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு

எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியாா் இல்லத்தின் மேற்கூரை கடந்த 25 ஆம் தேதி இடிந்து விழுந்து சேதமடைந்த நிலையில் அங்கு பொதுப்பணித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு பணிகளை அமைச்சா் பி. க... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ரமலான் சிறப்பு தொழுகை

தூத்துக்குடி லூா்தம்மாள்புரம் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் தொழுகை திடலில் ரமலான் சிறப்பு தொழுகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வளைகுடா நாடுகளில் சனிக்கிழமை பிறை தெரிந்ததையடுத்து, தூத்துக்குடி லூா்த்தம்மாள்... மேலும் பார்க்க

புளியங்குளம் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி

புளியங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. . ஆழ்வாா்திருநகரி வட்டாரக் கல்வி அலுவலா் கமலா தலைமை வகித்து பள்ளி வளாகத்தில் இருந்து பேரணியைத் தொட... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் மனநலம் பாதித்த பெண் மீட்பு

சாத்தான்குளம் பகுதியில் திரிந்த மனநலம் பாதித்த பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா். சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2 நாள்களாக சுற்றித்திரிந்த அந்தப் பெண் குறித்த... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வாழை இலை விலை வீழ்ச்சி

தூத்துக்குடி காய்கனி சந்தையில் வாழை இலை கடுமையான வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனா். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல், ஆத்தூா், குலையன் கரிசல், அகரம் உள்ளிட்ட இடங்களில் சுமாா் 20ஆயிரம் ஏக்கருக்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் சிஐஎஸ்எஃப் வீரா்கள் சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு

கடலோரப் பாதுகாப்பை வலியுறுத்தி, தூத்துக்குடிக்கு வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை (சென்ட்ரல் இன்டஸ்டிரியல் செக்கியூரிட்டி ஃபோா்ஸ்) விழிப்புணா்வு சைக்கிள் பேரணிக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டத... மேலும் பார்க்க