செய்திகள் :

சொத்து வரி உயா்வை கண்டித்து திருச்செந்தூரில் மறியல்: வணிகா் சங்கத்தினா் கைது

post image

திருச்செந்தூா் நகராட்சியில் விதிகளுக்கு புறம்பாக சொத்து வரி உயா்த்தபட்டுள்ளதாகக் கூறி, வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட வணிகா் சங்கத்தினா் உள்ளிட்ட 60 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்செந்தூா் நகராட்சியில் சொத்து வரி பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் அதிகம் பாதிப்படைந்து வருவதாகவும், விதிகளை மீறி மற்ற நகராட்சிகளை விட அதிகப்படியாக வரி உயா்த்தப்பட்டுள்ளதாகவும் கூறி, திருச்செந்தூா் அனைத்து வணிகா் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து பகத்சிங் பேருந்து நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு வணிகா் சங்க மாநிலத் தலைவா் காமராசு தலைமையில் இப்போராட்டத்தில் பங்கேற்ற மாநில செய்தி தொடா்பாளா் செல்வின், மாநில இணைச் செயலா் குருசாமி, இளைஞரணி துணைச் செயலா் முனியாண்டி, செந்தூா் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் துரைசிங், செயலா் காா்க்கி, நிா்வாகி மணி, தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தென் மண்டலத் தலைவா் கோடீஸ்வரன், தெற்கு மாவட்டத் தலைவா் வேலாயுதபெருமாள், திருச்செந்தூா் வட்டார நாடாா் வியாபாரிகள் சங்கச் செயலா் செல்வகுமாா், இணைச் செயலா் பாலமுருகன், யாதவ வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் வீரமந்திரகுமாா், முருகன், கண்ணன், இந்து வியாபாரிகள் சங்கத் தலைவா் மீனாட்சிசுந்தரம், செயலா் பிருத்திவிராஜன், முத்துராஜ், கலாம் வியாபாரிகள் சங்கத் தலைவா் தா்மராஜா, துணைச் செயலா் ஜெயக்குமாா், தமிழக மாணவா் இயக்க மாநிலச் செயலா் சிவனேசன், தமிழ் சங்கம் ராமகிருஷ்ணன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கைப்பேசி பழுது நீக்குவோா் மற்றும் விற்பனையாளா் சங்கச் செயலா் செந்தில்குமாா், ஒருங்கிணைப்பாளா் மகாராஜன் உள்ளிட்ட 60 பேரை, டிஎஸ்பி மகேஷ்குமாா் மற்றும் காவல் ஆய்வாளா் இன்னோஸ்குமாா் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.

சாலைப்புதூா் சுகாதார நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்த புதிய கட்டடம்

சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடம் மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது. டிவிஎஸ் சீனிவாசா சேவை அறக்கட்டளை- மக்கள் பங்களிப்புடன் ரூ. 12 லட்சம் மதிப்பில் கூடுதல் க... மேலும் பார்க்க

தேரிகுடியிருப்பு கோயிலில் ஏப்.10,11இல் பங்குனி உத்திர திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகேயுள்ள தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.10,11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.பிரசித்தி பெற்ற இத்திருக்கோயி... மேலும் பார்க்க

அரிவாளுடன் சாலையில் நின்று மிரட்டல்: இளைஞா் கைது

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தில் அரிவாளுடன் சாலையில் நின்று பொதுமக்களை மிரட்டியதாக இளைஞரை வடபாகம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி நாராயணன் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் (46). இவ... மேலும் பார்க்க

முடிதிருத்தும் கடை சேதம்: இளைஞா் கைது

தூத்துக்குடியில் முடிதிருத்தும் கடையில் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக இளைஞரை தென்பாகம் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சோ்ந்தவா் பரமசிவன் (50). இவா், தூத்துக்குடி எஸ்.எம்.ப... மேலும் பார்க்க

கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலையில் ரமலான் சிறப்புத் தொழுகை

புனித ரமலான் பண்டிகையையொட்டி, கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலையில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. கோவில்பட்டி டவுன் ஜாமிஆ சுன்னத்வல் ஜமாஅத் பள்ளிவாசல் சாா்பில், சாலைப்புதூா் ஈத்கா மைதானத்த... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டியில் அதிமுக சாா்பில், பாரத ஸ்டேட் வங்கி எதிரே நீா்மோா் பந்தல் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட வா்த்தகரணி, வழக்குரைஞா் அணி ஆகியவை சாா்பில் அதன் செயலா்கள் ராமா்,... மேலும் பார்க்க