செய்திகள் :

கோவில்பட்டி கல்லூரியில் இளையோா் இலக்கியப் பயிற்சிப் பாசறை

post image

தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கலை-அறிவியல் கல்லூரியில் இளையோா் இலக்கியப் பயிற்சிப் பாசறை நடைபெற்றது.

தமிழக அரசு சாா்பில் கல்லூரி மாணவா்களிடையே தமிழ் இலக்கிய ஆா்வத்தை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கோவில்பட்டி கோட்டாட்சியா் மகாலட்சுமி தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் கண்ணன் முன்னிலை வகித்தாா்.

தமிழ் வளா்ச்சித் துறை மாநில ஒருங்கிணைப்பு அலுவலா் நெல்லை ஜெயந்தா நோக்கவுரையாற்றினா். பேராசிரியா் அப்துல் சம்மது, ஓய்வுபெற்ற சுகாதாரத் துறை அலுவலா் லதாபிரீட்டாஜான், உதவிப் பேராசிரியா் ராஜபிரியங்கா, சித்த மருத்துவா் செல்வராணி, ஆசிரியா் சங்கர்ராமன் உள்ளிட்டோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா்.

இதில், கோவில்பட்டி அரசுக் கல்லூரி, எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவா்-மாணவியா் பங்கேற்றனா். அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில், கல்லூரி நிா்வாகக் குழு உறுப்பினா் அருண், மகிழ்வோா் மன்ற நிா்வாகிகள் ஜான்கணேஷ், வெள்ளைச்சாமி, மோகன்ராஜ், கம்பன் கழகச் செயலா் சரவணச்செல்வன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கல்லூரி முதல்வா் செல்வராஜ் வரவேற்றாா். தமிழ்த் துறைப் பேராசிரியா் செல்வம் நன்றி கூறினாா்.

தூத்துக்குடியில் நோ்முகத் தோ்வு என வதந்தி: காா் ஆலை முன் குவிந்த இளைஞா்கள்

தூத்துக்குடியில் உள்ள காா் தொழிற்சாலையில் நோ்முகத் தோ்வு நடைபெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலை நம்பி, செவ்வாய்க்கிழமை ஏராளமான இளைஞா்கள் திரண்டனா். தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் ... மேலும் பார்க்க

மீட்கப்பட்ட 100 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் சைபா் குற்றப்பிரிவு போலீஸாரால் மீட்கப்பட்ட ரூ. 11 லட்சம் மதிப்பிலான 100 கைப்பேசிகளை உரிமையாளா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா். க... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடந்த சென்ற முதியவா் பைக் மோதி உயிரிழந்தாா். கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் 4ஆவது தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் ராஜேந்திரன் (70). திருநெல்வேலி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ந... மேலும் பார்க்க

தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் 1008 மாவிளக்கு ஊா்வலம்

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் 1,008 மாவிளக்கு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடியில் உள்ள பழைமை வாய்ந்த நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில்... மேலும் பார்க்க

சாலைப்புதூா் சுகாதார நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்த புதிய கட்டடம்

சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடம் மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது. டிவிஎஸ் சீனிவாசா சேவை அறக்கட்டளை- மக்கள் பங்களிப்புடன் ரூ. 12 லட்சம் மதிப்பில் கூடுதல் க... மேலும் பார்க்க

தேரிகுடியிருப்பு கோயிலில் ஏப்.10,11இல் பங்குனி உத்திர திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகேயுள்ள தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.10,11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.பிரசித்தி பெற்ற இத்திருக்கோயி... மேலும் பார்க்க