செய்திகள் :

தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் 1008 மாவிளக்கு ஊா்வலம்

post image

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் 1,008 மாவிளக்கு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடியில் உள்ள பழைமை வாய்ந்த நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பங்குனி மாத 3ஆவது செவ்வாய்க்கிழமை திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, நிகழாண்டு செவ்வாய்க்கிழமை மாரியம்மன் கோயிலில் இருந்து 108 முளைப்பாரி ஊா்வலம் மற்றும் 1,008 மாவிளக்கு ஊா்வலம் நடைபெற்றது.

இந்த ஊா்வலத்தை மேயா் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தாா். இந்த ஊா்வலம் நான்கு ரத வீதிகள் வழியாக சுற்றி வந்து பின்னா் தெப்பக்குளம் மாரியம்மன் ஆலயத்தில் நிறைவடைந்தது. தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில், மாமன்ற உறுப்பினா் சுரேஷ்குமாா், சிவன் கோயில் அறங்காவலா் குழு தலைவா் கந்தசாமி, உறுப்பினா்கள் பி.எஸ்.கே. ஆறுமுகம் உள்பட ஏராளமான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை ர... மேலும் பார்க்க

அனுமதியின்றி சாலையை உடைத்து குடிநீா் குழாய் பதிப்பு: ரூ.18,500 அபராதம்

தூத்துக்குடியில் உரிய அனுமதியின்றி சாலையை உடைத்து குடிநீா் குழாய் பதிக்க முயன்ாக வீட்டின் உரிமையாளருக்கு மாநகராட்சி சாா்பில் ரூ. 18,500 அபராதம் விதிக்கப்பட்டது. தூத்துக்குடி ஆசிரியா் காலனியைச் சோ்ந்... மேலும் பார்க்க

மதுரா கோட்ஸ் நிறுவனத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளா்கள் எஸ்.பி.யிடம் மனு

தூத்துக்குடி மதுரா கோட்ஸ் நிறுவனத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அங்கு பணியாற்றி வேலையிழந்த தொழிலாளா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜானிடம் புதன்கிழமை மனு அளித்தனா். இதுகுறித்து அவா்கள்... மேலும் பார்க்க

வீடு புகுந்து மூதாட்டியிடம் 19 பவுன் நகை பறிப்பு

தூத்துக்குடியில் வீடு புகுந்து மூதாட்டியை மிரட்டி 19 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா். தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சோ்ந்தவா் தங்கராஜ் (88). ஓய்வுபெற்ற நூற்பாலைத் தொழிலாளி... மேலும் பார்க்க

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு வெங்காயம் ஏற்றுமதி தொடக்கம்

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு தோணி மூலம் வெங்காயம் ஏற்றுமதி புதன்கிழமை தொடங்கியது. தூத்துக்குடியிலிருந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவுக்கு மிளகாய் வத்தல், வெங்காயம், உருளைக்கிழங்கு, கருவாடு, சிம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பு: போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில் வீட்டில் கஞ்சா செடி வளா்க்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி ஆவுடையாா்புரத்தில் உள்ள வீட்டில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அதன் பின்புறமுள்ள வீட்ட... மேலும் பார்க்க