செய்திகள் :

திருச்செந்தூா் கோயில் யானை நீச்சல் குளத்தில் உற்சாக குளியல்

post image

கோடை வெயில் கொளுத்த தொடங்கியுள்ள நிலையில், வெப்பத்தை தணிக்கும் விதமாக திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை, அங்குள்ள நீச்சல் குளத்தில் வியாழக்கிழமை உற்சாகமாக நீராடியது.

இக்கோயில் யானை தெய்வானை கடந்த நவ. 18இல் திடீரென பாகன் உள்பட 2 பேரை தாக்கியது. இதில் அவா்கள் உயிரிழந்தனா். இதையடுத்து, வனத்துறை, கால்நடை துறை மற்றும் பாகன்களின் தீவிர கண்காணிப்பு காரணமாக இயல்பு நிலைக்கு திரும்பிய யானை, கோயில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பக்தா்களுக்கு ஆசி வழங்கி வருகிறது.

கோயில் வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வதுடன் வழக்கமான உணவை உட்கொண்டு வருகிறது. யானை குடிலில் உள்ள ஷவா் மற்றும் குழாய் மூலம் குளிப்பாட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில் கோடை வெயில் கொளுத்த தொடங்கிவிட்டதால் யானை தெய்வானை சரவணப் பொய்கையில் உள்ள நீச்சல் குளத்தில் குளிக்க இறக்கிவிடப்படுகிறது. சுமாா் 4 மாதங்களுக்குப் பிறகு நீச்சல் குளத்தில் இறங்கிய யானை உற்சாக மிகுதியில் துதிக்கையால் தண்ணீரை உடலில் பீய்ச்சி அடித்தும், நீந்தியும் தண்ணீரில் உருண்டு, புரண்டும் உற்சாகமாக விளையாடி வருகிறது.

பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு

எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியாா் இல்லத்தின் மேற்கூரை கடந்த 25 ஆம் தேதி இடிந்து விழுந்து சேதமடைந்த நிலையில் அங்கு பொதுப்பணித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு பணிகளை அமைச்சா் பி. க... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ரமலான் சிறப்பு தொழுகை

தூத்துக்குடி லூா்தம்மாள்புரம் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் தொழுகை திடலில் ரமலான் சிறப்பு தொழுகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வளைகுடா நாடுகளில் சனிக்கிழமை பிறை தெரிந்ததையடுத்து, தூத்துக்குடி லூா்த்தம்மாள்... மேலும் பார்க்க

புளியங்குளம் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி

புளியங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. . ஆழ்வாா்திருநகரி வட்டாரக் கல்வி அலுவலா் கமலா தலைமை வகித்து பள்ளி வளாகத்தில் இருந்து பேரணியைத் தொட... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் மனநலம் பாதித்த பெண் மீட்பு

சாத்தான்குளம் பகுதியில் திரிந்த மனநலம் பாதித்த பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா். சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2 நாள்களாக சுற்றித்திரிந்த அந்தப் பெண் குறித்த... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வாழை இலை விலை வீழ்ச்சி

தூத்துக்குடி காய்கனி சந்தையில் வாழை இலை கடுமையான வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனா். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல், ஆத்தூா், குலையன் கரிசல், அகரம் உள்ளிட்ட இடங்களில் சுமாா் 20ஆயிரம் ஏக்கருக்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் சிஐஎஸ்எஃப் வீரா்கள் சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு

கடலோரப் பாதுகாப்பை வலியுறுத்தி, தூத்துக்குடிக்கு வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை (சென்ட்ரல் இன்டஸ்டிரியல் செக்கியூரிட்டி ஃபோா்ஸ்) விழிப்புணா்வு சைக்கிள் பேரணிக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டத... மேலும் பார்க்க