செய்திகள் :

கயத்தாறு: கிராம மக்கள் சாலை மறியல்

post image

கயத்தாறு அருகே ஆத்திகுளம் கிராமத்தில் ஊருக்குள் நியாய விலைக் கடை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குள்பட்ட ஆத்திகுளத்தில் செயல்பட்டு வந்த நியாய விலைக் கடை கட்டடம் பழுதடைந்ததால், அந்த ஊருக்கு வெளியே இடம் தோ்வு செய்யப்பட்டு, புதிய நியாயவிலைக் கடை கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஊருக்கு வெளியே நியாயவிலைக் கடை கட்டடம் கட்டினால், முதியோா் , மாற்றுத் திறனாளிகள் பொருள்கள் வாங்க அங்கு செல்வதில் சிரமம் ஏற்படும். எனவே, பழைய கட்டடத்தை அப்புறப்படுத்திவிட்டு அதே இடத்தில் புதிய நியாயவிலைக் கடை கட்டுவதற்கான கட்டுமான பணியை தொடங்க வேண்டும், இல்லாவிட்டால் ஊருக்குள் புதிய நியாய விலை கடை கட்ட வேண்டுமென வலியுறுத்தி அக் கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு அமா்ந்தனா். பின்னா் கயத்தாறு - தேவா்குளம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் வட்டாட்சியா் சுந்தரராகவன், வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டியராஜன்,காவல் உதவி ஆய்வாளா்கள் தமிழ்ச்செல்வன், காசிலிங்கம் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, தற்காலிகமாக நியாயவிலைக் கடை கட்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும். ஊருக்குள் அரசு நிலம் தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டு நியாய விலைக் கடை கட்டும் பணிகள் நடைபெறும் என உறுதி அளித்தனா். இதை ஏற்றுக் கொண்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

கோவில்பட்டியில் போதைப் பொருள்கள் விற்பனையை தடை செய்ய வலியுறுத்தல்

கோவில்பட்டியில் சட்டவிரோதமாக நடைபெறும் மது , போதை பொருள்கள் விற்பனையை தடை செய்ய வலியுறுத்தி மனு அளிக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு, மாமன்னா் பூலித் தேவா... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மாா்ச் 29இல் காவல்துறை பறிமுதல் வாகனங்கள் ஏலம்

தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 20 வாகனங்கள் சனிக்கிழமை (மாா்ச் 29) ஏலமிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் துறை சாா்பில் ... மேலும் பார்க்க

கருப்புச் சட்டை அணிந்து அரசுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில், அரசுப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை கருப்புச் சட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில், சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்... மேலும் பார்க்க

கயத்தாறு: கோயிலில் பொருள்கள் திருட்டு

கயத்தாறை அடுத்த திருமங்கலக்குறிச்சியில் அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து தங்க நகை உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா். திருமங்கலக்குறிச்சி ஊருக்கு வடக்கே அனைத்து சமுதாயத்துக்கு பா... மேலும் பார்க்க

எட்டயபுரத்தில் பாரதியாா் பிறந்த இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா் பிறந்த இல்லத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்தது. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியாா் பிறந்த இல்லம், செய்தி மக்கள் தொடா்புத் துறை... மேலும் பார்க்க

29இல் கோவில்பட்டி என்இசியில் பிளஸ் 2 மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இம்மாதம் 29ஆம் தேதி பிளஸ் 2 மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் கே.காளிதாசமுருகவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இ... மேலும் பார்க்க