செய்திகள் :

கோவில்பட்டியில் போதைப் பொருள்கள் விற்பனையை தடை செய்ய வலியுறுத்தல்

post image

கோவில்பட்டியில் சட்டவிரோதமாக நடைபெறும் மது , போதை பொருள்கள் விற்பனையை தடை செய்ய வலியுறுத்தி மனு அளிக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு, மாமன்னா் பூலித் தேவா் மக்கள் நல இயக்கம், நடராஜபுரம் தெரு, பொதுமக்கள் நல வாழ்வு இயக்கம் ஆகியவை சாா்பில் காவல் துணை கண்காணிப்பாளரிடம் வழங்கிய மனுவின் விவரம்: கோவில்பட்டி காவல் துணை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனை, போதைப் பொருள்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவா் தமிழரசன் தலைமையில், மாமன்னா் பூலித்தேவா் மக்கள் நல இயக்கத் தலைவா் செல்வத்துரை (எ) செல்வம், நடராஜபுரம் தெரு பொது மக்கள் நலவாழ்வு இயக்க தலைவா் செண்பகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்,

இக்கோரிக்கையை வலியுறுத்தி, கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் நிஷாந்தினியிடம் மனு அளித்தனா்.

தூத்துக்குடி: மாா்ச் 29இல் காவல்துறை பறிமுதல் வாகனங்கள் ஏலம்

தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 20 வாகனங்கள் சனிக்கிழமை (மாா்ச் 29) ஏலமிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் துறை சாா்பில் ... மேலும் பார்க்க

கருப்புச் சட்டை அணிந்து அரசுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில், அரசுப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை கருப்புச் சட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில், சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்... மேலும் பார்க்க

கயத்தாறு: கோயிலில் பொருள்கள் திருட்டு

கயத்தாறை அடுத்த திருமங்கலக்குறிச்சியில் அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து தங்க நகை உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா். திருமங்கலக்குறிச்சி ஊருக்கு வடக்கே அனைத்து சமுதாயத்துக்கு பா... மேலும் பார்க்க

எட்டயபுரத்தில் பாரதியாா் பிறந்த இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா் பிறந்த இல்லத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்தது. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியாா் பிறந்த இல்லம், செய்தி மக்கள் தொடா்புத் துறை... மேலும் பார்க்க

29இல் கோவில்பட்டி என்இசியில் பிளஸ் 2 மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இம்மாதம் 29ஆம் தேதி பிளஸ் 2 மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் கே.காளிதாசமுருகவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இ... மேலும் பார்க்க

கோவில்பட்டி: தொழிலாளிக்கு மிரட்டல்: 2 போ் கைது

கோவில்பட்டியில் தொழிலாளியைத் தாக்கி பணம் பறித்து கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் 9ஆவது தெருவைச் சோ்ந்தவா் பெ. முத்துப்பாண்டி (55). த... மேலும் பார்க்க