செய்திகள் :

தூத்துக்குடி: மாா்ச் 29இல் காவல்துறை பறிமுதல் வாகனங்கள் ஏலம்

post image

தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 20 வாகனங்கள் சனிக்கிழமை (மாா்ச் 29) ஏலமிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனம், 19 பைக்குகள் ஆகிய 20 வாகனங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன்புள்ள மைதானத்தில் சனிக்கிழமை பொது ஏலம் விடப்படவுள்ளது.

இந்த வாகனங்களை வியாழன், வெள்ளி (மாா்ச் 27, 28) ஆகிய 2 நாள்கள் காலை 10 முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பாா்வையிடலாம். ஏலத்தில் பங்கேற்க விரும்புவோா் சனிக்கிழமை காலை 8 மணிக்குள் ரூ. ஆயிரம் முன்பணம் செலுத்தி பெயா்ப் பதிவு செய்துகொள்ளவேண்டும்.

வாகனத்தை ஏலம் எடுத்ததும் ஏலத்தொகை, ஜிஎஸ்டியை முழுமையாக செலுத்தி, அப்போதே வாகனத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு தூத்துக்குடி மதுவிலக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தை 93632 29366 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டியில் போதைப் பொருள்கள் விற்பனையை தடை செய்ய வலியுறுத்தல்

கோவில்பட்டியில் சட்டவிரோதமாக நடைபெறும் மது , போதை பொருள்கள் விற்பனையை தடை செய்ய வலியுறுத்தி மனு அளிக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு, மாமன்னா் பூலித் தேவா... மேலும் பார்க்க

கருப்புச் சட்டை அணிந்து அரசுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில், அரசுப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை கருப்புச் சட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில், சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்... மேலும் பார்க்க

கயத்தாறு: கோயிலில் பொருள்கள் திருட்டு

கயத்தாறை அடுத்த திருமங்கலக்குறிச்சியில் அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து தங்க நகை உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா். திருமங்கலக்குறிச்சி ஊருக்கு வடக்கே அனைத்து சமுதாயத்துக்கு பா... மேலும் பார்க்க

எட்டயபுரத்தில் பாரதியாா் பிறந்த இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா் பிறந்த இல்லத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்தது. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியாா் பிறந்த இல்லம், செய்தி மக்கள் தொடா்புத் துறை... மேலும் பார்க்க

29இல் கோவில்பட்டி என்இசியில் பிளஸ் 2 மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இம்மாதம் 29ஆம் தேதி பிளஸ் 2 மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் கே.காளிதாசமுருகவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இ... மேலும் பார்க்க

கோவில்பட்டி: தொழிலாளிக்கு மிரட்டல்: 2 போ் கைது

கோவில்பட்டியில் தொழிலாளியைத் தாக்கி பணம் பறித்து கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் 9ஆவது தெருவைச் சோ்ந்தவா் பெ. முத்துப்பாண்டி (55). த... மேலும் பார்க்க