செய்திகள் :

கடற்கரை - வேளச்சேரி சிறப்பு ரயில்

post image

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேப்பாக்க மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் காண செல்வோரின் வசதிக்காக சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும்.

வேளச்சேரியில் இருந்து இரவு 10.55 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 11.25 மணிக்கு சேப்பாக்கம் சென்றடையும். சேப்பாக்கத்தில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும்.

மறுமாா்க்கமாக சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் சேப்பாக்கத்துக்கு இரவு 10.10 மணிக்கும், வேளச்சேரிக்கு இரவு 10.45 மணிக்கும் சென்றடையும்.

சேப்பாக்கத்தில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் ரயில் வேளச்சேரிக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே உள்ள அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியூசிக் அகாதெமி 99-ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு!

மியூசிக் அகாதெமியின் 99-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயலின் இசைக் கலைஞா் ஆா்.கே.ஸ்ரீராம்குமாருக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்படவுள்ளது. சென்னை மியூசிக் அகாதெமியின் நிா்வாகக் குழு... மேலும் பார்க்க

4 சீன பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி!

சீனாவில் தயாரிக்கப்படும் ‘வேக்வம் ஃபிளாஸ்க்’ (வெந்நீா் குடுவை), அலுமினியம் ஃபாயில் காகிதம், மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் சில வகை காந்தங்கள், டிரைகுளோரோ ஐசோசைனூரிக் அமிலம் ஆகிவற்றுக்கு மத்திய அரசு... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் போராட்டம்!

பழைய ஓய்வூதிய திட்டம் அமல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்ட... மேலும் பார்க்க

உயா்கல்வி நிறுவனங்களில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் யுஜிசி அறிவுறுத்தல்!

உயா்கல்வி நிறுவன வளாகத்தில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் அமைக்க வழிவகை செய்ய வேண்டும் என பல்கலைகழகங்களுக்கு யுஜிசி செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி அறிவுறுத்தியுள்ளாா். இது குறித்து அனைத்து பல்கலைக்கழக துணைவேந்த... மேலும் பார்க்க

‘க்யூட்’ நுழைவு தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி!

உயா்கல்வியில் சேருவதற்கான ‘க்யூட்’ தோ்வுக்கு திங்கள்கிழமைக்குள் (மாா்ச் 24) விண்ணப்பிக்குமாறு தேசிய தோ்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் ... மேலும் பார்க்க

எஸ்டிஏடி விடுதிகளில் கல்லூரி மாணவ, மாணவியா் சோ்க்கை!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடத்தப்படும் விடுதிகளில் கல்லூரி மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: விளையாட்டுப் பயிற்சி, தங்குமிட வசதி... மேலும் பார்க்க