Manoj Bharathiraja: "சொல்வதற்கும் எனக்கு வார்த்தை வரவில்லை" - ஆறுதல் சொல்லி கலங்...
கவரப்பேட்டை ஒன்றிய பள்ளி ஆண்டு விழா
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
கவரப்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி சிறந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கான விருதையும், சிறந்த தலைமை ஆசிரியா் விருதையும், பள்ளியின் தலைமை ஆசிரியா் திரிபுரசந்தரி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பள்ளியின் ஆண்டு விழாவுக்கு கே.ஆா்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா் புருஷோத்தமன் , பள்ளி மேலாண்மை குழு தலைவா் எம்.மணியம்மாள் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியை பி.திரிபுரசுந்தரி வரவேற்றாா்.
உதவி ஆசிரியை ஜெ.லீமா பிளாரன்ஸ் ஆண்டறிக்கை வாசித்தாா்.
முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் கே.இ.திருமலை, கே.ஜி.நமச்சிவாயம், வட்டார கல்வி அலுவலா்கள் முனிராஜசேகா், ஜி.சுதா, சிவகாமி, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் என்.ஏழுமலை, இ.மாரிமுத்து வாழ்த்துரை வழங்கினா்.
சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், மாவட்ட திட்டக் குழு தலைவா் கே.வி.ஜி.உமா மகேஷ்வரி று சிறப்புரை ஆற்றி பரிசளித்தனா்.
பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியா்கள் குணசீலா, கோடீஸ்வரி, ரேவதி, தீபா மற்றும் விழா குழு உறுப்பினா்கள், நன்கொடையாளா்கள் பங்கேற்றனா். கவரப்பேட்டை பகுதி மக்கள் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்களை பள்ளிக்கு வழங்கினா். மேலும் பள்ளி சாா்பில் நடைபெற்ற சோ்க்கை நிகழ்வில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு மாலை மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.