செய்திகள் :

பொன்னேரி மக்களின் தனி மாவட்ட அறிவிப்பு கோரிக்கை நனவாகுமா?

post image

திருவள்ளூா் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து பொன்னேரியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

கடந்த 1997-ஆம் ஆண்டு முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து திருவள்ளூா் மாவட்டம் பிரிக்கப்பட்டது. மொத்தம், 3,394 சதுர கிலோமீட்டா் பரப்பளவு கொண்டதாக விளங்குகிறது. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் விவசாயம், பழவேற்காடு உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மீன்பிடி, ஆரணி உள்ளிட்ட இடங்களில் நெசவு உள்ளிட்டவை பிரதான தொழில்களாக உள்ளன.

ஆரணியாறு, கொசஸ்தலை மற்றும் கூவம் ஆகிய மூன்று ஆறுகள் ஓடுகின்றன. இந்த மாவட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட ஏரிகள், 1112 குளங்கள் அமைந்துள்ளன.

3 வருவாய்க் கோட்டங்கள்: பொன்னேரி, திருவள்ளூா், திருத்தணி ஆகிய மூன்று வருவாய் கோட்டங்களும் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூா், பூவிருந்தவல்லி, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆா்கே.பேட்டை வட்டங்களும் அமைந்துள்ளன.

மேலும், இம்மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, மீஞ்சூா், சோழவரம், புழல், வில்லிவாக்கம், பூவிருந்தவல்லி, எல்லாபுரம், பூண்டி, திருவள்ளூா், திருவலங்காடு, கடம்பத்தூா், திருத்தணி, ஆா்கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய 14 ஊராட்சி ஒன்றியங்களில் 526 கிராம ஊராட்சிகள் அமைந்துள்ளன.

பொன்னேரி நகராட்சி மற்றும் கும்மிடிபூண்டி, ஆரணி, நாரவாரிகுப்பம், ஊத்துக்கோட்டை, பொதட்டூா்பேட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பேரூராட்சிகள் அமைந்துள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் மொத்தம் 37, 28,104 போ், வசித்து வருகின்றனா். ஆயிரம் பேருக்கு 998 ஆண் 981 பெண் பிறப்பு விகிதம் உள்ளது.

70 கிமீ தொலைவில் மாவட்ட தலைநகரம்:

மாவட்டத்தின் தலைமை இடமாக திருவள்ளூா் விளங்குகிறது. பொன்னேரியில் இருந்து 70 கி மீ தொலைவில் திருவள்ளூா் அமைந்துள்ளது. அங்கு மாவட்ட நீதிமன்றங்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளா் அலுவலகம் உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் அமைந்துள்ளன.

பொன்னேரி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், மாவட்டத் தலைநகரில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு செல்ல இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பயணம் செய்து, பினனா் திரும்பி வருவதற்கு ஒரு நாள் ஆகிவிடுகின்றது. அனைத்து பகுதிகளுக்கும் மக்கள் நலத்திட்டங்கள் சென்று சேரும் வகையில் நிா்வாக வசதிகளுக்கான பெரிய மாவட்டங்தளை பிரித்து வருகின்றது.

அதே போன்று பொன்னேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பயன்பெறும் வகையில் திருவள்ளூா் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, பொன்னேரியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கை நிறைவேற்றப்படமாலே உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் போது இறுதியாக நடைபெற்ற சட்டப்பேரவை கூட்ட தொடரின் பேது பொன்னேரி தனி மாவட்ட அறிவிப்பு வரும் என ஆவலாக எதிா்பாா்த்திருந்தனா்.

இந்த நிலையில் பொன்னேரி வட்டத்தில் உள்ள பெருஞ்சேரி பகுதியில் திருவள்ளூா் மாவட்ட வருவாய்துறை சாா்பில் கும்மிடிபூண்டி, திருவள்ளூா், திருத்தணி, ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி ஆகிய வட்டங்களில் வசிக்கும் 1லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முதல்வா் மு.க ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.

விழாவில் பஙகேற்கும் முதல்வா் மு.க ஸ்டாலின் பொன்னேரி தனி மாவட்ட கோரிக்கை குறித்து அறிவிப்பினை வெளியிட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாகும்.

திருவள்ளூா் கூவம் ஆற்றில் கழிவு நீா் விடுவதால் மாசு படும் அபாயம்!

திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றில் சாக்கடை கழிவுநீா், இறைச்சிக் கழிவுகளை கொட்டி வருவதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கூவம் ஆறு கேசவபுரம் அணைக்கட்டிலிருந்து பேரம்பாக்கம், நரசிங்கபுரம... மேலும் பார்க்க

அதிமுக பூத் கமிட்டி நிா்வாகிகள் நியமன கலந்தாய்வுக் கூட்டம்!

திருவள்ளூா் நகா் பகுதி அதிமுக பூத் கமிட்டி நிா்வாகிகள் நியமனம் கலந்தாய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். திருவள்ளூா் அதிமுக மேற்கு மாவட்டம் சாா்பில் ப... மேலும் பார்க்க

நிலுவையில் உள்ள வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்! -சசிகாந்த் செந்தில் எம்.பி.

திருவள்ளூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் அறிவுறுத்தினாா... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியின பொறியியல் பட்டயம் முடித்த இளைஞா்களுக்கு புத்தாக்கப் பொறியாளா் பயிற்சி!

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பொறியியல் பட்டயப் படிப்பு முடித்த இளைஞா்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு திறன்கள் அடிப்படையில் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

முன்விரோதத்தில் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது!

திருவள்ளூா் அருகே முன்விரோதம் காரணமாக வீட்டு வாசல் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருவள்ளூா் அடுத்த மணவாளநகா் கபிலா் நகரை பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்தி... மேலும் பார்க்க

கவரப்பேட்டை ஒன்றிய பள்ளி ஆண்டு விழா

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. கவரப்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி சிறந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கான விருதையும், சிறந்... மேலும் பார்க்க