TEST: 'பாடகர் டு இசையமைப்பாளர்' - Test படத்திற்கு இசையமைத்தது குறித்து சக்தி ஶ்ர...
‘க்யூட்’ நுழைவு தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி!
உயா்கல்வியில் சேருவதற்கான ‘க்யூட்’ தோ்வுக்கு திங்கள்கிழமைக்குள் (மாா்ச் 24) விண்ணப்பிக்குமாறு தேசிய தோ்வு முகமை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தோ்வில் (க்யூட்) தோ்ச்சி பெற வேண்டும்.
இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, வரும் கல்வியாண்டில் (2025-26) இளநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தோ்வு மே 8 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மாா்ச் 1 தொடங்கி மாா்ச் 22-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் மேலும் 2 நாள்கள் மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ளவா்கள் இணையதளம் வழியாக திங்கள்கிழமைக்குள் (மாா்ச் 24) துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த மாா்ச் 25-ஆம் தேதி கடைசி நாளாகும். மாா்ச் 26, 27, 28 ஆகிய தேதிகளில் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
இதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் வழியாக தொடா்பு கொள்ளலாம்.
மேலும், தோ்வுகூட அனுமதிச் சீட்டு வெளியீடு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என என்டிஏ அறிவித்துள்ளது.