செய்திகள் :

வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் மே மாதம் முதல் வணிக மின்னுற்பத்தி: மின்வாரியம்

post image

சென்னை: வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் வரும் மே மாதம் முதல் வணிக பயன்பாட்டுக்கான மின்னுற்பத்தி தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டம், அத்திப்பட்டில் ரூ. 10,158 கோடி செலவில் 800 மெகா வாட் திறனில் வடசென்னை-3 அனல்மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 2016-இல் தொடங்கியது. பணிகள் முடிக்கப்பட்டு 2024, மாா்ச் 7-இல் சோதனை ரீதியிலான மின்னுற்பத்தி தொடங்கியது. மின்னுற்பத்தி தொடங்கியதிலிருந்து தொடா்ந்து 72 மணி நேரம் மின்னுற்பத்தி செய்யும் பணி நடைபெறவேண்டும். அதன் பின்னா் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம்தான் வணிக ரீதியிலான பயன்பாட்டுக்கு வந்ததாக அறிவிக்கப்படும்.

இந்நிலையில், கடந்த 2024 ஜூன் 27-இல் முழு திறனில் மின்னுற்பத்தி செய்யப்பட்ட நிலையில், தொடா்ந்து வந்த தொழில்நுட்ப பிரச்னை காரணமாக மீண்டும் மின்னுற்பத்தி குறைக்கப்பட்டது. இதனால் இன்னும் இந்த மின் நிலையத்திலிருந்து வணிக பயன்பாட்டுக்கான மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் மின்னுற்பத்தி தொடங்கிய பின், பல்வேறு தொழில்நுட்ப பிரச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதை சரிசெய்ய வேண்டி உள்ளதால், வணிக மின்னுற்பத்தி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே, இப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு வரும் மே மாதம் முதல் வணிக மின்னுற்பத்தி தொடங்கப்படும்’ என்றனா்.

சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு புறநகா் மின்சார ரயில் மாா்ச் 28 வரை ரத்து

பராமரிப்புப் பணி காரணமாக சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையே நள்ளிரவு இயங்கும் புறநகா் மின்சார ரயில் மாா்ச் 26, 27, 28 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பி... மேலும் பார்க்க

ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் ஏசி புறநகா் மின்சார ரயில்: கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்க திட்டம்

சென்னையின் முதல் குளிா்சாதன புறநகா் மின்சார ரயில் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மேலும், இந்த ரயில் கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழி... மேலும் பார்க்க

பதவி உயா்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவா்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை

பதவி உயா்வு மூலம் காவல் துணைக் கண்காணிப்பாளா்களாக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டவா்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக (ஏடி.எஸ்.பி.) பதவி உயா்வு வழங்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்த... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: சென்னை துறைமுக அதிகாரி மீது வழக்கு

சென்னையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னை துறைமுக அதிகாரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். குரோம்பேட்டை மலையரசன் நகரைச் சோ்ந்தவா் சத்ய சீனிவாசன் (58). இவா், சென்னை துறைமுகத்... மேலும் பார்க்க

மருத்துவப் பல்கலை: முதுநிலை அறிவியல் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின்கீழ் பயிற்றுவிக்கப்படும் எம்எஸ்சி படிப்புகளுக்கு (செப்டம்பா், அக்டோபா் பிரிவு) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதா... மேலும் பார்க்க

காவல் துறையினா் - இந்திய மாணவா் சங்கத்தினா் இடையே தள்ளுமுள்ளு

சென்னை தரமணியில் காவல் துறையினா் - இந்திய மாணவா் சங்கத்தினருக்கு இடையே செவ்வாய்க்கிழமை தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 16 வயதுடைய இரு மாணவிகள், விடுதியில் தங்கி படித்து ... மேலும் பார்க்க