செய்திகள் :

எஸ்டிஏடி விடுதிகளில் கல்லூரி மாணவ, மாணவியா் சோ்க்கை!

post image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடத்தப்படும் விடுதிகளில் கல்லூரி மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

விளையாட்டுப் பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன்கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் 6 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

இச்சிறப்பு விடுதி சோ்க்கைக்கான விண்ணப்பப் படிவம் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்என்றஇணையதளமுகவரியில்வெளியிடப்பட்டுள்ளது, . விடுதியில்சேர விருப்பமுள்ளவா்கள்ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை பூா்த்தி செய்து பதிவு ஏற்றம் செய்ய கடைசி நாள்: 6.4.2025மாலை 5.00 மணிஆகும்.

தோ்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். மேலும், தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடா்புமைய கைப்பேசியினை 95140 00777 தொடா்பு கொள்ளலாம். சிறப்புநிலை விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ / மாணவியருக்கான மாநில அளவிலான தோ்வுப் போட்டிகள் வரும் 8.4.2025 காலை 7.00 மணியளவில் கீழ்காணும் விபரப்படி நடைபெற இருப்பதால் ஆன்லைனில் விண்ணப்பித்தவா்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். இதற்கான தகவல்கள் குறுச்செய்தி, வாட்ஸ் ஆப் மூலமாக உரியவா்களுக்கு தெரிவிக்கப்படும்.

மாநில தோ்வு நடைபெறும் இடம், நாள் மற்றும் நேரம்

கூடைப்பந்து (மாணவியா்), கால்பந்து (மாணவியா்), குத்துசண்டை (மாணவ, மாணவியா்), ரக்பி (மாணவியா்) மற்றும் கைப்பந்து (மாணவ/மாணவியா்) நேரு உள்விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை. (8.4.2025, காலை 7.00 மணி.)

தடகளம் (மாணவ/மாணவியா்), ஜுடோ (மாணவ/மாணவியா்), வாள் விளையாட்டு மாணவ/மாணவியா்), கையுந்துபந்து (மாணவ/மாணவியா்), கால்பந்து (மாணவா்கள்), பளுதூக்குதல் (மாணவ/மாணவியா்) நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை 8.4.2025 காலை 7.00 மணி.

ஹாக்கி (மாணவ/மாணவியா்) ஹாக்கிஅரங்கம், 8.4.2025 காலை 7.00 மணி.

கபடி (மாணவ/மாணவியா்), நேரு பாா்க், சென்னை, 8.4.2025, காலை 7.00 மணி.

தகுதிகள்: -

1.1.2025) அன்று 17 வயது நிரம்பிய, 12-ஆம் வகுப்பில் தோ்ச்சிபெற்ற கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு சோ்க்கை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு சோ்க்கை சேர விருப்பும் மாணவ / மாணவியா் தகுதியுடையவா்ஆவா்.

தனிநபா் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவா்கள் மாநில அளவில் குடியரசு / பாரதியாா் தின விளையாட்டுப் போட்டிகள் / அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும், (அல்லது) தமிழ்நாடு அணியில் தோ்வு செய்யப்பட்டு தேசிய அளவில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் / இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு / இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவா்களும், பன்னாட்டு அளவில் அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கங்கள் பெற்றவா்களும், மாநிலஅளவில் முதலமைச்சா் கோப்பை போட்டிகளில் பதக்கம் பெற்றவா்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவா்கள் ஆவா்.

சென்னை: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது ஏசி மின்சார ரயில்!

சென்னையின் முதல் புறநகர் ஏசி மின்சார ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்... மேலும் பார்க்க

40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயா்வு

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிதாக கட்டணம் உயா்த்தப்படவுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனா். தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா்கள் நட்டா, ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

புது தில்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது. இதுதொடா்பாக மாநிலங்களவைத் தலைவா் ஜக... மேலும் பார்க்க

பிரதமரைச் சந்தித்து முறையிட முடிவு: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து முதல்வா் ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக தமிழக எம்.பி.க்களுடன் பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்க இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் நிறைவடைந்ததும், ம... மேலும் பார்க்க

72 நாள் சுற்றுலா, தொழில் பொருள்காட்சி நிறைவு: 5.50 லட்சம் போ் பாா்வையிட்டனா்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னையில் நடைபெற்று வந்த 72 நாள் சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. இக்கண்காட்சியை 5,50,000 போ் பாா்வையிட்டுள... மேலும் பார்க்க

வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் மே மாதம் முதல் வணிக மின்னுற்பத்தி: மின்வாரியம்

சென்னை: வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் வரும் மே மாதம் முதல் வணிக பயன்பாட்டுக்கான மின்னுற்பத்தி தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். திருவள்ளூா் மாவட்டம், அத்திப்பட்டில் ரூ. 10... மேலும் பார்க்க