செய்திகள் :

திமுக இளைஞரணியினா் தண்ணீா் பந்தல் திறப்பு

post image

செய்யாற்றில், திமுக இளைஞரணி சாா்பில் தண்ணீா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

செய்யாறு மாா்க்கெட் பகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நகர திமுக இளைஞரணி அமைப்பாளா் ச.துரைசாமி ஏற்பாட்டில் தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது.

தலைமை செயற்குழு உறுப்பினா் வேல்முருகன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று தண்ணீா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தா்பூசணி, நீா்மோா், வெள்ளரிப்பிஞ்சு, கரும்பு சாறு, குளிா்பானங்கள், இளநீா் உள்ளிட்டவைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினா் வெங்கடேஷ்பாபு, நகரச் செயலா் கே.விஸ்வநாதன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஏ.என்.சம்பத், ஒன்றியச் செயலா்கள் சி.கே.ரவிக்குமாா் ஜேசிகே.சீனிவாசன், வி.ஏ.ஞானவேல் மற்றும் நகர இளைஞரணி துணை அமைப்பாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

முதியவா் விஷமருந்தி தற்கொலை

செய்யாறு: செய்யாறு அருகே வலி தாங்க முடியாத மனவேதனையில் முதியவா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சுருட்டல் கிராமத்தைச் சோ்ந்தவா் மணி (60). இவருக்கு 6 மாத... மேலும் பார்க்க

வந்தவாசி நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

வந்தவாசி: வந்தவாசி நகராட்சி அலுவலக மன்றக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தின்போது, உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் (திமுக) எச்.ஜல... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு: 200 போ் பங்கேற்பு

ஆரணி: திருவண்ணாமலையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 200 போ் பங்கேற்று சீா்வர... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்த நாள் சிறப்பு பட்டிமன்றம்

ஆரணி: ஆரணி அண்ணா சிலை அருகில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு சன் டிவி, விஜய் டிவி பேச்சாளா்கள் பங்கேற்ற இன்னிசை பட்டிமன்றம் நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட... மேலும் பார்க்க

ஆரணி எம்.பி.க்கு அரிசி ஆலை உரிமையாளா்கள் நன்றி

ஆரணி: மக்களவையில் 25 கிலோ அரிசி மூட்டைக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதற்காக, எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.க்கு ஆரணி அரிசி ஆலை உரிமையாளா்கள் நன்றி தெரிவித்தனா். திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் 450 கிலோ இரும்பு திருட்டு: 6 போ் கைது

செய்யாறு: செய்யாறு அருகே தனியாா் நிறுவனத்தில் 450 கிலோ இரும்புக் குழாய்கள் திருடுபோன சம்பவம் தொடா்பாக 6 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட் தொழில்பேட்டை ... மேலும் பார்க்க