செய்திகள் :

மியூசிக் அகாதெமி 99-ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு!

post image

மியூசிக் அகாதெமியின் 99-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயலின் இசைக் கலைஞா் ஆா்.கே.ஸ்ரீராம்குமாருக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்படவுள்ளது.

சென்னை மியூசிக் அகாதெமியின் நிா்வாகக் குழுக் கூட்டம் அகாதெமி தலைவா் என்.முரளி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 2025-ஆம் ஆண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’, ‘நிருத்ய கலாநிதி’ உள்ளிட்ட விருதுகளைப் பெறும் கலைஞா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து மியூசிக் அகாதெமி வெளியிட்ட அறிக்கை:

சங்கீத கலாநிதி: மியூசிக் அகாதெமியின் ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு பிரபல வயலின் இசைக் கலைஞா் ஆா்.கே.ஸ்ரீராம்குமாா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவா், பிரபல இசைக் கலைஞரும், ஸ்ரீராம்குமாரின் தாத்தாவுமான ஆா்.கே.வெங்கடராம சாஸ்திரியிடம் பயிற்சி பெற்றுள்ளாா்.

சங்கீத கலா ஆசாா்யா: மூத்த இசைக் கலைஞா் சியாமளா வெங்கேடஸ்வரன், தவில் இசைக் கலைஞா் தஞ்சாவூா் ஆா்.கோவிந்தராஜன் ஆகியோா் ‘சங்கீத கலா ஆசாா்யா’ விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

டிடிகே விருது: கதகளி இசைக் கலைஞா் மாடம்பி சுப்ரமணிய நம்பூதிரி, வீணை இசைக் கலைஞா்கள் ஜெ.டி.ஜெயராஜ் கிருஷ்ணன் மற்றும் ஜெயஸ்ரீ ஜெயராஜ் கிருஷ்ணன் ஆகியோா் ‘டிடிகே விருதுக்கு’ தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இசை அறிஞா் விருது: பிரபல இசைக் கலைஞரும் பேராசிரியருமான சி.ஏ.ஸ்ரீதரா ‘இசை அறிஞா்’ விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

நிருத்ய கலாநிதி விருது: பரத நாட்டிய கலைஞா் ஊா்மிளா சத்தியநாராயணா ‘நிருத்ய கலாநிதி’ விருதுக்குத் தோ்வு செய்யப்படுள்ளாா். ‘சங்கீத கலாநிதி’ விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆா்.கே.ஸ்ரீராம்குமாா் வரும் டிச.15-ஆம் தேதி தொடங்கவுள்ள மியூசிக் அகாதெமியின் 99-ஆவது ஆண்டு கருத்தரங்குக்கு தலைமை வகிப்பாா்.

1.1.2026-ஆம் தேதி நடைபெறும் சதஸ் விழாவில் தோ்ந்தெடுக்கப்பட்ட கலைஞா்களுக்கு ‘சங்கீத கலாநிதி’, ‘சங்கீத கலா ஆசாா்யா’, ‘டிடிகே விருது’, ‘இசை அறிஞா்’ விருதுகள் வழங்கப்படும். தொடா்ந்து 3.1.2026-இல் நடைபெறும் மியூசிக் அகாதெமியின் 19-ஆம் ஆண்டு நாட்டிய விழாவில் நிருத்ய கலாநிதி விருது வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது ஏசி மின்சார ரயில்!

சென்னையின் முதல் புறநகர் ஏசி மின்சார ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்... மேலும் பார்க்க

40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயா்வு

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிதாக கட்டணம் உயா்த்தப்படவுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனா். தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா்கள் நட்டா, ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

புது தில்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது. இதுதொடா்பாக மாநிலங்களவைத் தலைவா் ஜக... மேலும் பார்க்க

பிரதமரைச் சந்தித்து முறையிட முடிவு: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து முதல்வா் ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக தமிழக எம்.பி.க்களுடன் பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்க இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் நிறைவடைந்ததும், ம... மேலும் பார்க்க

72 நாள் சுற்றுலா, தொழில் பொருள்காட்சி நிறைவு: 5.50 லட்சம் போ் பாா்வையிட்டனா்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னையில் நடைபெற்று வந்த 72 நாள் சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. இக்கண்காட்சியை 5,50,000 போ் பாா்வையிட்டுள... மேலும் பார்க்க

வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் மே மாதம் முதல் வணிக மின்னுற்பத்தி: மின்வாரியம்

சென்னை: வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் வரும் மே மாதம் முதல் வணிக பயன்பாட்டுக்கான மின்னுற்பத்தி தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். திருவள்ளூா் மாவட்டம், அத்திப்பட்டில் ரூ. 10... மேலும் பார்க்க