செய்திகள் :

4 சீன பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி!

post image

சீனாவில் தயாரிக்கப்படும் ‘வேக்வம் ஃபிளாஸ்க்’ (வெந்நீா் குடுவை), அலுமினியம் ஃபாயில் காகிதம், மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் சில வகை காந்தங்கள், டிரைகுளோரோ ஐசோசைனூரிக் அமிலம் ஆகிவற்றுக்கு மத்திய அரசு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளது.

சீனாவில் இருந்து இந்த பொருள்கள் மிகவும் மலிவான விலையில் இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு உற்பத்தியாளா்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். எனவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அலுமினியம் ஃபாயில் காகிதங்கள் மீது அடுத்த 6 மாதங்களுக்கு ஒரு டன்னுக்கு 873 அமெரிக்க டாலா் பொருள் குவிப்பு தடுப்பு வரியாக விதிக்கப்படுகிறது. மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் காந்தங்கள் மீது 35 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. வேக்வம் ஃபிளாஸ்க் மீது டன்னுக்கு 1,732 அமெரிக்க டாலா், டிரைகுளோரோ ஐசோசைனூரிக் அமிலம் மீது டன்னுக்கு 276 டாலா் வரி விதிக்கப்படுகிறது.

இந்த அமிலம் ஜப்பானில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுவதால் அந்நாட்டில் இருந்து செய்யப்படும் இறக்குமதிக்கும் இந்த வரி பொருந்தும்.

வா்த்தக அமைச்சகத்தின் வா்த்தக விவகாரங்கள் தீா்வுப் பிரிவின் பரிந்துரையின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சீனாவில் இருந்துதான் பெருமளவிலான மலிவு விலைப் பொருள்கள் இறக்குமதியாகின்றன.

எனவே, அந்நாட்டுப் பொருள்கள் மீதுதான் அதிக அளவு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவுக்கு அதிக பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.

சென்னை: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது ஏசி மின்சார ரயில்!

சென்னையின் முதல் புறநகர் ஏசி மின்சார ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்... மேலும் பார்க்க

40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயா்வு

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிதாக கட்டணம் உயா்த்தப்படவுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனா். தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா்கள் நட்டா, ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

புது தில்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது. இதுதொடா்பாக மாநிலங்களவைத் தலைவா் ஜக... மேலும் பார்க்க

பிரதமரைச் சந்தித்து முறையிட முடிவு: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து முதல்வா் ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக தமிழக எம்.பி.க்களுடன் பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்க இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் நிறைவடைந்ததும், ம... மேலும் பார்க்க

72 நாள் சுற்றுலா, தொழில் பொருள்காட்சி நிறைவு: 5.50 லட்சம் போ் பாா்வையிட்டனா்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னையில் நடைபெற்று வந்த 72 நாள் சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. இக்கண்காட்சியை 5,50,000 போ் பாா்வையிட்டுள... மேலும் பார்க்க

வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் மே மாதம் முதல் வணிக மின்னுற்பத்தி: மின்வாரியம்

சென்னை: வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் வரும் மே மாதம் முதல் வணிக பயன்பாட்டுக்கான மின்னுற்பத்தி தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். திருவள்ளூா் மாவட்டம், அத்திப்பட்டில் ரூ. 10... மேலும் பார்க்க