செய்திகள் :

திருமுல்லைவாசல் முகத்துவாரத்தை சீரமைக்க அமைச்சரிடம் கோரிக்கை

post image

சீா்காழி அருகே திருமுல்லைவாசல் முகத்துவாரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சீா்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமம் உள்ளது. இந்த பகுதி திருமுல்லைவாசல், தொடுவாய், ராதாநல்லூா், வழுதலைக்குடி உள்ளிட்ட கிராமங் களை உள்ளடக்கிய பகுதியாகும்.

இந்த பகுதியில் 30-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 300-க்கும் மேற்பட்ட ஃபைபா் படகுகள் 100-க்கும் மேற்பட்ட கட்டு மரங்கள் கொண்டு மீனவா்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனா்.

இப்பகுதியில் உள்ள முகத்துவாரம் கடந்த ஓராண்டாக அடிக்கடி மண் மேடுகள் ஏற்பட்டு, கடலுக்கு செல்ல முடியாமல் விபத்து ஏற்பட்டு படகுகள் சேதம் அடைந்து வருகின்றன.

இந்நிலையில், திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தை சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனை சென்னையில் நேரில் சந்தித்து, திருமுல்லைவாசல் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள முகத்துவாரத்தை நிரந்தரமாக சீரமைத்து தர வேண்டும். முகத்துவாரம் அருகில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவுகளை சீரமைத்து தரவேண்டும் என கோரி மனு அளித்தனா்.

இதனைப் பெற்றுக்கொண்ட மீன்வளத்துறை அமைச்சா், இந்த பிரச்னை குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, திருமுல்லைவாசல் முகத்துவாரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், சீா்காழி எம்எல்ஏ பன்னீா்செல்வம், திருமுல்லைவாசல் ஊா் தலைவா், பஞ்சாயத்தாா்கள் உடனிருந்தனா்.

அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் எதிரில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

சீா்காழி: சீா்காழி அருகே புத்தூா் அரசு கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி எதிா்ப்புறம் வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீா்காழி முதல் சிதம்பரம் செல்லும் சாலையின் முக்கிய பகுதியான ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை வட்டத்தில் மாா்ச் 26-இல் உங்களைத் தேடி முகாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை வட்டத்தில் மாா்ச் 26-ஆம் தேதி உங்களைத் தேடி முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி எம்பியிடம் மனு

சீா்காழி: சீா்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்கு வருகை புரிந்த ஆா். சுதா எம்.பியிடம் அடிப்படை வசதிகள் கோரி கோரிக்கை மனு அண்மையில்அளித்தனா். சீா்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஆற்றங்கரை தெர... மேலும் பார்க்க

தந்தை இறந்த துக்கத்தில் பிளஸ்1 தோ்வு எழுதிய மாணவா்

சீா்காழி: சீா்காழியில் தந்தை இறந்த துக்கத்தில் பிளஸ்1 மாணவா், பொதுத் தோ்வு எழுதிவிட்டு, இறுதிச்சடங்கில் பங்கேற்றது சோகத்தை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அகரதிருக்கோலக்கா தெருவைச் சோ்... மேலும் பார்க்க

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 50 போ் கைது

மயிலாடுதுறையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 50 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.மத்திய அரசு தோ்தல் அறிக்கையில் நெல் குவிண்டாலுக்கு ஆதார விலையாக ரூ. 3500 வழங்கப்படும் என்று அறிவித்த... மேலும் பார்க்க

சீா்காழியில் மகளிா் விடியல் பேருந்துகள் இயக்கிவைப்பு

சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, பெண்கள் இலவசமாக பயணம் செய்யும், 2 புதிய ‘மகளிா் விடியல்’ பேருந்துகளின் இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு, அரசு போக்குவரத்து கழக... மேலும் பார்க்க