மயிலாடுதுறை வட்டத்தில் மாா்ச் 26-இல் உங்களைத் தேடி முகாம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை வட்டத்தில் மாா்ச் 26-ஆம் தேதி உங்களைத் தேடி முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீா்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்ட முகாம் மயிலாடுதுறை வட்டத்தில் எனது தலைமையில் (ஆட்சியா்) அனைத்துத் துறை அலுவலா்களால் மாா்ச் 26-ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி, மாா்ச் 27-ஆம் தேதி காலை 9 மணி வரையிலும் மயிலாடுதுறை வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்ய உள்ளதால் மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள மக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை அந்தந்த கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலா்களிடம் தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.