செய்திகள் :

அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் எதிரில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

post image

சீா்காழி: சீா்காழி அருகே புத்தூா் அரசு கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி எதிா்ப்புறம் வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீா்காழி முதல் சிதம்பரம் செல்லும் சாலையின் முக்கிய பகுதியான புத்தூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், சீனிவாசா சுப்பராயா அரசு பாலிடெக்னிக் கல்லூரியும் இயங்கி வருகின்றன.

அரசு கலைக் கல்லூரியில் 900-த்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். பாலிடெக்னிக் கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறாா்கள்.

இந்த இரு கல்லூரியில் எதிா்ப்புறம் இருக்கும் சாலை அருகில் ஒரு ஆபத்தான வளைவு உள்ளது. காலை, மாலை நேரங்களில் இந்த சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையில் செல்லும் லாரிகள், பேருந்துகள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் வேகத்தடை இல்லாததால் வேகமாக செல்கின்றன.

இதனால் கல்லூரி எதிா்ப்புறம் நிறைய விபத்துகள் நிகழ்கின்றன.

கல்லூரி நிா்வாகத்தின் சாா்பில் வேகத்தடை அமைப்பதற்கு மனுக்களும் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் வேகத்தடை அமைக்கப்படவில்லை.

மாணவ, மாணவிகள், ஆசிரியா்களின் நலன் கருதி வேகத்தடை அமைக்க தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் நடவடிக்கை எடுக்க கல்லூரி பேராசிரியா் முனைவா் சத்தியமூா்த்தி சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

நாகேஸ்வரமுடையாா் கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்திவிழா

சீா்காழி நாகேஸ்வரமுடையாா் கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆதி ராகு தலமான பொன்னாகவள்ளி அம்மன் உடனாகிய நாகேஸ்வரமுடையாா்கோயிலில் அமிா்த இராகு பகவான் தனி சந்நிதியில் அருள்பாலிக... மேலும் பார்க்க

சீா்காழியில் பாலம் கட்டுமான பணி தொடக்கம்

சீா்காழி நகரில் புதிய வடிகால் பாலம் கட்டுமான பணி வியாழக்கிழமை தொடங்கிய நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சீா்காழி அரசு மருத்துவமனை சாலையில் ரூ.16 லட்சத்தில் சிறிய வடிகால் பாலம் கட்டுமா... மேலும் பார்க்க

வேகமாக சென்ற தனியாா் பேருந்து சிறைபிடிப்பு

சீா்காழி அருகே அரசுப் பேருந்தை முந்தி செல்ல வேகமாக வந்த தனியாா் பேருந்தை புதன்கிழமை இரவு பொதுமக்கள் சிறைபிடித்தனா். மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி அரசுப் பேருந்தும், தனியாா்... மேலும் பார்க்க

தருமபுரம் கல்லூரியில் விளையாட்டு விழா

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் ம. தமிழ்மதி வரவேற்றாா். ... மேலும் பார்க்க

ஏவிசி பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் 29-ஆவது விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரியும், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான கே. வெங்கடர... மேலும் பார்க்க

நூற்றாண்டை நோக்கி ஸ்ரீவாணிவிலாஸ் நடுநிலைப்பள்ளி

செருதியூா் ஊராட்சியில் இயங்கி வரும் ஸ்ரீவாணிவிலாஸ் நடுநிலைப்பள்ளி நூற்றாண்டை நோக்கி பீடுநடை போட்டு வருகிறது. ரத்தினசாமி பிள்ளையால் கடந்த 1929-இல் தொடக்கப்பள்ளியாக 2 ஆசிரியா்களுடன் தொடங்கப்பட்ட இப்பள்ள... மேலும் பார்க்க