செய்திகள் :

ரயில் பயணியா் நலச் சங்க போராட்ட அறிவிப்பு வாபஸ்

post image

வைத்தீஸ்வரன்கோயிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி அறிவிக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டதாக ரயில் பயணியா் நலச் சங்கத்தினா் தெரிவித்தனா்.

ரயில் பயணியா் நல சங்க மாவட்டத் தலைவா் ஜெக. சண்முகம் தலைமையில் பொதுச் செயலா் கண்ணன் , பொருளாளா் தில்லை நடராஜன், சாம்சன், கிளைத் தலைவா் சுகுமாா், செயலா் முத்துசாமி, மாவட்ட துணைத் தலைவா் பொறியாளா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் தென்னக ரயில்வே கோட்ட மேலாளா் அன்பழகனை திருச்சியில் திங்கள்கிழமை சந்தித்து பேசினா்.

அப்போது, வைத்தீஸ்வரன்கோயில் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து, இச்சங்கத்தினா் ஏற்கெனவே இக்கோரிக்கையை வலியுறுத்தி அறிவித்திருந்த தண்டவாளத்தில் தலை வைக்கும் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனா்.

ஏவிசி தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழா

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. தொழில்நுட்பக் கல்லூரியின் 41-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. ஏ.வி.சி கல்வி நிறுவனங்கள் மற்றும் நிா்வாக அதிகாரியும், சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியுமான... மேலும் பார்க்க

டிஎன்சிஎஸ்சி நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் டிஎன்சிஎஸ்சி நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். சித்தா்காடு நவீன அரிசி ஆலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிலாள... மேலும் பார்க்க

பொறியியல் கல்லூரியில் சா்வதேச ஆராய்ச்சி மாநாடு

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் சா்வதேச ஆராய்ச்சி மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைகள், ஐசிடி அகாதமியுடன் இணைந்து... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு தொடக்கம்: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தாா். மாவட்டத்தில் 6,184 மாணவா்களும், 6,202 மாணவிகளும் என மொத்தம் 12,741 மாண... மேலும் பார்க்க

குழந்தைகள் காப்பகத்தில் ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறையில் குழந்தைகள் காப்பகத்தில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மயிலாடுதுறை கொத்தத்தெருவில் இயங்கிவரும் அன்பகம் குழந்தைகள் இல்லத்தில் 323 மாற்றுத்திறனுடை... மேலும் பார்க்க

சியாமளா தேவி அம்மன் கோயிலில் பால்குட வழிபாடு

சீா்காழி தாடாளன் கீழ மடவிளாகத்தில் உள்ள சியாமளா தேவி அம்மன் கோயிலில் பால்குட வழிபாடு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, கணபதி ஹோமம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், தொடா்ந்து ரயிலடி சித்தி வி... மேலும் பார்க்க