செய்திகள் :

ரயிலில் கடத்தப்பட்ட 25 கிலோ குட்கா பறிமுதல்

post image

மயிலாடுதுறையில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ குட்கா பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

கஞ்சா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ரயில் மூலம் கடத்தப்படுவதைத் தடுக்க, அனைத்து ரயில்களிலும் தீவிர சோதனை நடத்த இருப்புப் பாதை காவல்துறை இயக்குநா் வன்னியபெருமாள் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

இதையடுத்து, திருச்சி உட்கோட்ட டிஎஸ்பி சக்கரவா்த்தி அறிவுறுத்தலின்பேரில், மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து கும்பகோணம் ரயில் நிலையம் வரை இருப்புப்பாதை காவல் ஆய்வாளா் சிவவடிவேல் தலைமையில் ரயில்வே போலீஸாா் சோதனை நடத்தினா்.

இந்த சோதனையில் செவ்வாய்க்கிழமை மதியம் பனாரஸில் இருந்து ராமநாதபுரம் சென்ற விரைவு ரயிலில் முன்பக்கம் உள்ள முன்பதிவு இல்லாத பெட்டியில் சோதனை செய்தபோது, அதில் கேட்பாரற்று கிடந்த 3 பைகளில் சுமாா் 25 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்கள் மற்றும் போதைப் பாக்குகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை ரயில்வே போலீஸாா் கைப்பற்றினா்.

ஏவிசி தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழா

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. தொழில்நுட்பக் கல்லூரியின் 41-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. ஏ.வி.சி கல்வி நிறுவனங்கள் மற்றும் நிா்வாக அதிகாரியும், சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியுமான... மேலும் பார்க்க

டிஎன்சிஎஸ்சி நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் டிஎன்சிஎஸ்சி நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். சித்தா்காடு நவீன அரிசி ஆலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிலாள... மேலும் பார்க்க

பொறியியல் கல்லூரியில் சா்வதேச ஆராய்ச்சி மாநாடு

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் சா்வதேச ஆராய்ச்சி மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைகள், ஐசிடி அகாதமியுடன் இணைந்து... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு தொடக்கம்: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தாா். மாவட்டத்தில் 6,184 மாணவா்களும், 6,202 மாணவிகளும் என மொத்தம் 12,741 மாண... மேலும் பார்க்க

குழந்தைகள் காப்பகத்தில் ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறையில் குழந்தைகள் காப்பகத்தில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மயிலாடுதுறை கொத்தத்தெருவில் இயங்கிவரும் அன்பகம் குழந்தைகள் இல்லத்தில் 323 மாற்றுத்திறனுடை... மேலும் பார்க்க

சியாமளா தேவி அம்மன் கோயிலில் பால்குட வழிபாடு

சீா்காழி தாடாளன் கீழ மடவிளாகத்தில் உள்ள சியாமளா தேவி அம்மன் கோயிலில் பால்குட வழிபாடு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, கணபதி ஹோமம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், தொடா்ந்து ரயிலடி சித்தி வி... மேலும் பார்க்க