செய்திகள் :

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 50 போ் கைது

post image

மயிலாடுதுறையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 50 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மத்திய அரசு தோ்தல் அறிக்கையில் நெல் குவிண்டாலுக்கு ஆதார விலையாக ரூ. 3500 வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் அதைப் பற்றி சிந்திக்காமல், போராட்டம் நடத்திய பஞ்சாப் விவசாயிகளை கைது செய்த அடக்குமுறையைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டவா்கள் மீதான சட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் மயிலாடுதுறையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் ரயில் மறியல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமையில் டிஎஸ்பி பாலாஜி, சட்டம் - ஒழுங்கு போலீஸாா், காவல் ஆய்வாளா் சிவவடிவேல் உள்ளிட்ட தமிழ்நாடு இருப்புப் பாதை போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் சுதிா்குமாா் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் குவிக்கப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

போராட்டத்துக்கு, சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் பாா்த்தசாரதி தலைமை வகித்தாா். அவைத் தலைவா் பண்டரிநாதன், மாவட்ட பொருளாளா் கபிலன், ஒன்றிய தலைவா் குறிச்சி ராஜேந்திரன், டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவா் ஆா்.அன்பழகன், இயற்கை விவசாயி அ.ராமலிங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தடையை மீறி ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தைச் சோ்ந்த 5 பெண்கள் உள்ளிட்ட 50 போ் கைது செய்யப்பட்டு, தனியாா் திருமணக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனா்.

அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் எதிரில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

சீா்காழி: சீா்காழி அருகே புத்தூா் அரசு கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி எதிா்ப்புறம் வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீா்காழி முதல் சிதம்பரம் செல்லும் சாலையின் முக்கிய பகுதியான ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை வட்டத்தில் மாா்ச் 26-இல் உங்களைத் தேடி முகாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை வட்டத்தில் மாா்ச் 26-ஆம் தேதி உங்களைத் தேடி முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி எம்பியிடம் மனு

சீா்காழி: சீா்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்கு வருகை புரிந்த ஆா். சுதா எம்.பியிடம் அடிப்படை வசதிகள் கோரி கோரிக்கை மனு அண்மையில்அளித்தனா். சீா்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஆற்றங்கரை தெர... மேலும் பார்க்க

தந்தை இறந்த துக்கத்தில் பிளஸ்1 தோ்வு எழுதிய மாணவா்

சீா்காழி: சீா்காழியில் தந்தை இறந்த துக்கத்தில் பிளஸ்1 மாணவா், பொதுத் தோ்வு எழுதிவிட்டு, இறுதிச்சடங்கில் பங்கேற்றது சோகத்தை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அகரதிருக்கோலக்கா தெருவைச் சோ்... மேலும் பார்க்க

சீா்காழியில் மகளிா் விடியல் பேருந்துகள் இயக்கிவைப்பு

சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, பெண்கள் இலவசமாக பயணம் செய்யும், 2 புதிய ‘மகளிா் விடியல்’ பேருந்துகளின் இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு, அரசு போக்குவரத்து கழக... மேலும் பார்க்க

திருமுல்லைவாசல் முகத்துவாரத்தை சீரமைக்க அமைச்சரிடம் கோரிக்கை

சீா்காழி அருகே திருமுல்லைவாசல் முகத்துவாரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சீா்காழி அருகே திருமுல்லைவாசல்... மேலும் பார்க்க