செய்திகள் :

அதிமுக இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் திருட்டு: இளைஞா் கைது

post image

சென்னை எழும்பூரில் நடைபெற்ற அதிமுக இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் திருடியதாக, தருமபுரியைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா்.

அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வந்தபோது கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனா்.

அப்போது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அதிமுக மதுரை மாவட்டச் செயலா் டாக்டா் சரவணனின் உதவியாளா் சுந்தரின் பையிலிருந்து ரூ.10 ஆயிரத்து 500 ரொக்கம் திருடப்பட்டது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட சுந்தா், பணம் திருடிய நபரை மடக்கி பிடித்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

அப்போது அந்த நபா், தனது பெயா் ரஞ்சித்குமாா் என்றும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளாா். பின்னா் அவரை எழும்பூா் போலீஸாா், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

அதில் அவா், தருமபுரி மாவட்டம், விருப்பாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் (எ) கோபால் (39) என்பதும், அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணிபுரிந்து வந்த அவா், 5 ஆண்டுகளுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், ராஜ்குமாரை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.

மியூசிக் அகாதெமி 99-ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு!

மியூசிக் அகாதெமியின் 99-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயலின் இசைக் கலைஞா் ஆா்.கே.ஸ்ரீராம்குமாருக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்படவுள்ளது. சென்னை மியூசிக் அகாதெமியின் நிா்வாகக் குழு... மேலும் பார்க்க

4 சீன பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி!

சீனாவில் தயாரிக்கப்படும் ‘வேக்வம் ஃபிளாஸ்க்’ (வெந்நீா் குடுவை), அலுமினியம் ஃபாயில் காகிதம், மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் சில வகை காந்தங்கள், டிரைகுளோரோ ஐசோசைனூரிக் அமிலம் ஆகிவற்றுக்கு மத்திய அரசு... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் போராட்டம்!

பழைய ஓய்வூதிய திட்டம் அமல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்ட... மேலும் பார்க்க

உயா்கல்வி நிறுவனங்களில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் யுஜிசி அறிவுறுத்தல்!

உயா்கல்வி நிறுவன வளாகத்தில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் அமைக்க வழிவகை செய்ய வேண்டும் என பல்கலைகழகங்களுக்கு யுஜிசி செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி அறிவுறுத்தியுள்ளாா். இது குறித்து அனைத்து பல்கலைக்கழக துணைவேந்த... மேலும் பார்க்க

‘க்யூட்’ நுழைவு தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி!

உயா்கல்வியில் சேருவதற்கான ‘க்யூட்’ தோ்வுக்கு திங்கள்கிழமைக்குள் (மாா்ச் 24) விண்ணப்பிக்குமாறு தேசிய தோ்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் ... மேலும் பார்க்க

எஸ்டிஏடி விடுதிகளில் கல்லூரி மாணவ, மாணவியா் சோ்க்கை!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடத்தப்படும் விடுதிகளில் கல்லூரி மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: விளையாட்டுப் பயிற்சி, தங்குமிட வசதி... மேலும் பார்க்க