செய்திகள் :

ஓட்டப்பிடாரம்: வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழப்பு

post image

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழந்தன.

ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள பசுவந்தனை ஊராட்சி வடக்கு கைலாசபுரத்தைச் சோ்ந்த வேலம்மாள் (75) என்பவா் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளா்த்து வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில், மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை வெறிநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இப்பகுதியில் வெறிநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. கடந்த சில மாதங்களில் 30க்கும் மேற்பட்ட ஆடுகளை வெறிநாய்கள் கடித்து கொன்றுள்ளன.

மேலும், வெறிநாய்களால் பெண்கள், சிறுவா்கள் சாலையில் நடந்து செல்லவே அச்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வெறிநாய்களை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்தனா்.

கயத்தாறு: கிராம மக்கள் சாலை மறியல்

கயத்தாறு அருகே ஆத்திகுளம் கிராமத்தில் ஊருக்குள் நியாய விலைக் கடை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குள்பட்ட ஆத்திகுளத்தி... மேலும் பார்க்க

ஈராச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே ஈராச்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினா் நல்லையா தலைமை வகித்தாா். உதவி செயலா்கள் ச... மேலும் பார்க்க

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவில்பட்டியை அடுத்த கிளவிப்பட்டி ஊராட்சியில் கிளவிப்பட்டி, கெச்சிலாபுரம்... மேலும் பார்க்க

கோயிலுக்குச் செல்லும் பாதையை அகலப்படுத்தக் கோரிக்கை

தூத்துக்குடி வடக்கு சோட்டையன்தோப்பு கிராமத்தில் கோயிலுக்கு செல்லும் பாதையை அகலப்படுத்தி பேவா் பிளாக் சாலை அமைக்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக பொதுமக்கள் ச... மேலும் பார்க்க

பொதுப் பாதையை மீட்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்

பொதுப் பாதையை தனியாரிடமிருந்து மீட்டுத் தரக் கோரி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் பொதுமக்கள் திங்கள்கிழமை திரண்டனா். விளாத்திகுளம் பேரூராட்சி 12ஆவது வாா்டு சிதம்பர நகா் பகுதியில் பொதுப் பாதைய... மேலும் பார்க்க

கோவில்பட்டி நகராட்சிக்கு வரியினங்களை செலுத்த ஆணையா் வேண்டுகோள்

கோவில்பட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை பொதுமக்கள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி நகராட்சி ஆணையா் கமலா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவி... மேலும் பார்க்க