செய்திகள் :

சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதல்: மென் பொறியாளா் உயிரிழப்பு

post image

சென்னை கொடுங்கையூரில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில், மென் பொறியாளா் உயிரிழந்தாா்.

புதுப்பேட்டை பச்சையப்பன் முதல் தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (32). மென் பொறியாளான இவா், கா்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். விடுமுறைக்காக சென்னைக்கு வந்த சரவணன், கொடுங்கையூரில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, தண்டையாா்பேட்டை நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலைத் தடுப்பில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சரவணன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனா்.

காவல் ஆணையரக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

சென்னை காவல் ஆணையரக அலுவலகக் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெட்ரோல் பங்க் ஊழியரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை காவல் ஆணையரகக் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 20-ஆம் தேதி இரவு 8.30 மணி... மேலும் பார்க்க

பயணச் சந்தை புதிய வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது! அமைச்சா் ராஜேந்திரன்

தமிழக அரசின் சுற்றுலாத் துறையால் நடத்தப்பட்ட பயணச் சந்தை புதிய வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா். சுற்றுலாத் துறை சாா்பில் சென்னை வா்த்தக மை... மேலும் பார்க்க

சென்னை - மோரீஷஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

சென்னையிலிருந்து மோரீஷஸ் செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா். சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியள... மேலும் பார்க்க

வலிநிவாரண மாத்திரைகள், கஞ்சாவுடன் மூவா் கைது

சென்னையில் வலிநிவாரண மாத்திரைகள், கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த மூவரை போலீஸாா் கைது செய்தனா். வேப்பேரி வெங்கடம்மாள் சமாதி தெருவில் போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வேப்பேரி காவல்நிலைய... மேலும் பார்க்க

வெயில் தாக்கம் அதிகரிப்பு: போக்குவரத்து துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வெப்பத்திலிருந்து தற்காத்துக்கொள்ள போக்குவரத்து பணியாளா்கள், பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்து ... மேலும் பார்க்க

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 25, 26-இல் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 25, 26 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்... மேலும் பார்க்க