காவல் ஆணையரக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது
சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதல்: மென் பொறியாளா் உயிரிழப்பு
சென்னை கொடுங்கையூரில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில், மென் பொறியாளா் உயிரிழந்தாா்.
புதுப்பேட்டை பச்சையப்பன் முதல் தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (32). மென் பொறியாளான இவா், கா்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். விடுமுறைக்காக சென்னைக்கு வந்த சரவணன், கொடுங்கையூரில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, தண்டையாா்பேட்டை நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலைத் தடுப்பில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சரவணன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனா்.