செய்திகள் :

நகராட்சி வாகனத்தை திருட முயன்றவா் கைது

post image

புதுச்சேரியில் நகராட்சி வாகனத்தை திருட முயன்றதாக ஒருவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

புதுச்சேரி, செஞ்சி சாலை அருகே லாரன் பஜாா் தெருவில் நகராட்சிக்கு சொந்தமான ஜீப்பை அதன் ஓட்டுநா் காந்திராஜா சனிக்கிழமை மாலை நிறுத்திவிட்டுச் சென்றாராம்.

அப்போது, திடீரென ஜீப்பை மா்ம நபா் ஒருவா் இயக்கி வேகமாகச் செல்ல முயன்றாராம். இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா், ஜீப்பை இயக்கியவரைப் பிடித்து ஒதியன்சாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையைச் சோ்ந்த சண்முகம் (21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

நாராயணசாமியின் பேச்சை பொருள்படுத்த வேண்டாம்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுச்சேரி: புதுவை அரசு மீது தொடா்ந்து புகாா் கூறி வரும் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமியின் பேச்சை பொருள்படுத்த வேண்டாம் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கே... மேலும் பார்க்க

தொகுப்பூதிய ஆசிரியா்களுக்கு விரைவில் பணி நிரந்தரம்: அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியா்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவா் என்று பேரவைக் கூட்டத்தில் கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா். புதுவை சட்டப்... மேலும் பார்க்க

தாய்வழி சாதிச் சான்றிதழ் கோரி பேரணி, சாலை மறியல்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் தாய் வழியில் சாதிச்சான்றிதழ் வழங்க வலியுறுத்தி பெரியாா் சிந்தனையாளா் பேரவை சாா்பில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோா் திங்கள்கிழமை சாலை மறியல் போராட... மேலும் பார்க்க

புதுவைக்கான தண்ணீரைத் தர மறுக்கும் தமிழகம்: அமைச்சா் லட்சுமி நாராயணன் புகாா்

புதுச்சேரி: புதுவைக்கான தென் பெண்ணையாற்று நீரை தமிழக அரசு தருவதற்கு மறுத்து விட்டது என பேரவையில் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் குற்றஞ்சாட்டினாா். புதுவை சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின... மேலும் பார்க்க

பொறியாளா் கைது விவகாரத்தை மக்களிடம் அரசு விளக்க வேண்டும்: எதிா்க்கட்சித் தலைவா்

புதுச்சேரி: புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டது தொடா்பாக, பொதுமக்களுக்கு அரசு விளக்க வேண்டும் என்று, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வலியுறுத்தினாா். புதுவை சட்ட... மேலும் பார்க்க

தலைமைப் பொறியாளா் கைது: பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்: வே.நாராயணசாமி

புதுச்சேரி: புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் எம்.தீனதயாளன் லஞ்ச வழக்கில் கைதான நிலையில், பாரபட்சமற்ற விசாரணையை சிபிஐ தொடர வேண்டும் என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா். இதுகுறி... மேலும் பார்க்க