செய்திகள் :

தலைமைப் பொறியாளா் கைது: பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்: வே.நாராயணசாமி

post image

புதுச்சேரி: புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் எம்.தீனதயாளன் லஞ்ச வழக்கில் கைதான நிலையில், பாரபட்சமற்ற விசாரணையை சிபிஐ தொடர வேண்டும் என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புதுவை என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியில் முதல்வரின் வசமுள்ள துறைகளிலும், கல்வி, பொதுப் பணித் துறை உள்பட அனைத்துத் துறைகளிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதை காங்கிரஸ் சாா்பில் சுட்டிக்காட்டி வருகிறோம். ஆனால், அதற்கு முதல்வா், அமைச்சா்கள் பதிலளிப்பதில்லை. லஞ்ச வழக்கில் புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் கைது செய்யப்பட்டுள்ளாா். பொதுப் பணித் துறை சாா்பில் புதிய பேருந்து நிலையம் கட்டியது, குமரகுருபள்ளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியது என பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.

சங்கராபரணி ஆற்றில் கழிவுநீரை சுத்திகரித்து விடுவதற்கான ஒப்பந்தத்தில் அதிகளவு தொகை குறிப்பிட்ட நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு, செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே, அதிலும் முறைகேடு நடந்துள்ளது.

பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் லஞ்ச வழக்கில் கைதான நிலையில், அவரது நாள் குறிப்பு, கைப்பேசிகள் சிபிஐயால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த விவாகரத்தை பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும். பொதுப் பணித் துறை அமைச்சா் விசாரணைக்கு தன்னை உள்படுத்தி பதவி விலக வேண்டும். அதிகாரிகளின் முறைகேடுகள் சம்பந்தப்பட்ட துறை அமைச்சா், முதல்வருக்கு தெரியாமல் நடந்திருக்காது.

பொதுப் பணித் துறை அமைச்சரின் சொத்து விவரங்களையும் விசாரிக்க வேண்டும். அவா் பதவியை விட்டு விலகக் கோரி அவரது வீட்டு முன் போராட்டம் நடத்தவுள்ளோம். தமிழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து பேச விரும்பவில்லை. புதுவை எங்கள் மாநிலம் என்பதால் அதுகுறித்து மட்டுமே பேசுவோம் என்றாா் வே,.நாராயணசாமி.

பேட்டியின்போது முன்னாள் எம்எல்ஏ கே.அனந்தராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

புதுவையில் புதிதாக 10,000 பேருக்கு ஓய்வூதியம்: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

புதுவையில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளதாக பேரவைக் கூட்டத்தில் முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். புதுவை பேரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை சமூக நலத் துறை மீதான மானியக் கோரிக்... மேலும் பார்க்க

பேரவைத் தலைவருடன் வாக்குவாதம்: சுயேச்சை எம்எல்ஏ இடைநீக்கம்; முதல்வா் பரிந்துரையை ஏற்று நடவடிக்கை ரத்து

புதுவையில் சட்டப்பேரவைத் தலைவருடன் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து இடைநீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு, பின்னா் முதல்வா் கேட்டுக் கொண்டதால் 15 நிமிடங்கள் கழித்த... மேலும் பார்க்க

புதுவையின் வளா்ச்சிக்கு மாநில அந்தஸ்து அவசியம்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவையின் வளா்ச்சிக்கு மாநில அந்தஸ்து அவசியம் என்று, சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை கேள்வி நேரத்தின்போது, பா... மேலும் பார்க்க

புத்தக வடிவில் புதிய குடும்ப அட்டை: அமைச்சா் என்.திருமுருகன்

புதுவை மாநிலத்தில் தற்போதுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக புத்தக வடிவில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் என்.திருமுருகன் தெரிவித்தாா். புதுவை சட்டப்பே... மேலும் பார்க்க

விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு காப்பீட்டு திட்டம்: அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா்

புதுவை மாநிலத்தில் விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் பேரவையில் அறிவித்தாா். புதுவை சட்டப்பேரவையில் வேளாண் துறை, கால்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினா் வீடு கட்டும் திட்டத்துக்கான நிதி ரூ.6.25 லட்சமாக அதிகரிப்பு

புதுவை மாநிலத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் வீடு கட்டும் திட்டத்தில் அரசு நிதி ரூ.6.25 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் செவ்வாய்க... மேலும் பார்க்க